பக்கம்:மனோன்மணீயம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : முதற் களம் 71 ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் 215. அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால். ஐயமொன் றில்லை அதனால் மொய்குழல் மாதற்பாற் று.ாதுசெல் வல்லமை கூடும், 220. பித்த னெப்படிச் சுந்தரர்க்கு (13) ஒத்த தோழனா யுற்றனன் வியப்பே! முனிவரும் வரவர மதியிழந் தனரே. இருக்கும், இருக்கும், இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி 225. விடுத்திடு துரது விரைந்து கால விளம்பனஞ் சாலவுத் தீதே. (14) குடில: ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் து.ாது செல்வான் தொழுதுன் அதுமதி பெறவரு வான்நீ காண்க: 230. இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! (15) (குடிலன் போக) வே: (தனதுள்) நல்லது! ஆ1 ஆ! நமது பாக்கியம் - அல்லவோ இவனை நாம் அமைச்சனாப் பெற்றதும் என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை: (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி) வம்மின், வம்மின், வந்து சிறிது 235. காலமானது போலும். நமது மந்திரியுடன் சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் சூழ்ச்சியன். امیر 1. த்ெதை வினே தாழ்த்தல் (delay)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/73&oldid=856819" இலிருந்து மீள்விக்கப்பட்டது