பக்கம்:மனோன்மணீயம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் அரண்மனை. o காலம் : காலை (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன் : * ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன்' பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் 5. உபாயமும் யாவும் உடையான் ; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண் வீண் ! o குடில : o H-H பலதேவ னாலொரு பழுதுறும் என வெனக் கிலையிலை ஐயம் சிறிதும் உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் 10. முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர்; அவனாற் பழுதிலை கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சினைக் கஞ்சார் நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர்தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சி டிற் கெஞ்சுவர்: 15. என்னும் தொன் மொழி- ஒன்று ண் டதனால் மன்னவ! சற்றே மருளும்? என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ்சி சினத்தோன் என்றார் பலரும். ஜீவ : - சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி 1. மகன் (ஈண்டு பலதேவன்) 2. பழமொழி 3. மயங்கும்: 4. கோபிக்கும். - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/96&oldid=856866" இலிருந்து மீள்விக்கப்பட்டது