பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊 மன்னிக்கத் தெரியாதவர் அதற்குக் காரணம் அவ்வம்மையார் எழுந்து நடமாடும் கபாலம் பெற்றிராததேயாகும். அந்த அம்மாள் உட்கார்ந்தி இடத்தைவிட்டு எழவேண்டு மானுல் யாராவது உதவி புரித்தால்தான் முடியும். வட்டப் பாறை மாதிரி, பருமளுப் பெரிசாய்” இருந்தாள் அவள். தனது உடலைத் தூக்கிக்கொண்டு நிற்பதே அவளுக்குப் பெரும் சிரமமாக இருந்தபோது, அவள் அங்குமிங்கும் அலேந்து திரிவது எப்படி சாத்தியமாகும்? பெரிய அம்மாளை மாதவன் முதலில் பார்த்தபோது திகைப்படைந்து விட்டான். மனித உடல்-அதிலும் ஒரு பெண் உருவம்-இவ்வளவு பெரிதாகவும் விகாரமாகவும் வளர முடியும் என நான் எண்ணியதே கிடையாது. மேல் பாகம் சிறுத்து, மத்திய பாகம் மிகுதியாகப் பெருத்து, மீண்டும் குறுகலாகி, சேச்சே, காணச்சகியாத தோற்றம்! சதை அங்கங்கே உருட்டித் திரட்டிப் பூசி வைக்கப்பட்டது போல, உருவ அமைதி இழந்து கோரமாய்ப் பிதுக்கிக் கொண்டு நிற்கின்றது. இந்த உடல் இப்படி வளருவதற்கு எத்தனே வருஷங்கள் பிடித்தனவோ! எத்தனை டன் தீனி தேவைப்பட்டதோ என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டான் அவன். - விசாலாட்சி அம்மாள் அபூர்வமாக எப்பாவது காரில் வெளியே போய் வருவாள். முக்கிய உறவினர் அல்லது பிரமுகர் வீட்டு விசேஷம் எதற்காவது செல்வாள். மாலை வேளைகளில்-குளிருதே... உடம்புக்கு என்னவோ மாதிரி இருக்குதே என்று தோன்ருதபோது-வீட்டு வராந்தாவில் அவளுக்கென ஒதுக்கப்பெற்றிருந்த பெரிய சாய்வு நாற்காலி யில் சாய்ந்திருப்பாள். மரத்தினுல் செய்யப்பட்ட பழங் காலத்து நாற்காலி அது. ஈவிசேர் மாதிரி இருக்கும். சீக்குக் காரர்கள் சுகமாகச் சாய்ந்திருக்கவும், முதியவர்கள் ஒய்வு பெறுவதற்கும் பெரிய வீட்டார் அத்தகைய நாற்காலியை உபயோகித்து வந்தார்கள். பூதம் போன்ற உடலையும், சதை தளதளத்து வெளிறிய மஞ்சள் நிறமாய்த் தொங்கிய கன்னங்களையும், ஒளி மங்கிய