பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ i09 ஒ. பிடிக்குமே! அதிலும், சிங்காரி-ஒய்யாரி-ஜகத்தை மயக்குமிந்த மதிமுகத்தைப் படைத்திட்ட அலங்காரிஅதிதிரி-அற்புதி-பிரமாதி ட்ரைவ் செய்கிற காரிலே... . என்று பாடல்போல் வசனத்தை இழுத்தான் அவன். வசந்தா ஐயோ. ஐயோ. ஐயோ!' என்ருள். அவள் உதடுகள் குவிந்ததும், கன்னங்கள் குழிந்ததும், கண்கள் ஒளிர்ந்ததும் கன ஜோராக இருந்தன. மாதவன் ரசித்து மகிழாமலா நிற்பான்? சரி. ஏறிக்கொள்ளுங்கள்’ எ ன்று தனக்குப் பக்கத் தில் உள்ள கதவைத் திறந்தாள் அழகி. அவனும் ஏறி ஜம்மென்று அமர்ந்துகொண்டான். கார் வெறும் பாதையில் செல்வதாகத் தோன்றவில்லே அவனுக்கு. இன்ப யாத்திரையில் மனேகரமாகச் செல்லும் ரதத்தில் உல்லாச ேமா கி னி யோ டு மிதந்துபோவதுபோலவே இருந்தது. அன்று அவனுக்கு நல்ல நாள்தான். ஆனந்தமும் இன்ப மும் திகட்டக்கூடிய அளவுக்கு அளித்துத் தானும் மகிழ்த்தான் வசந்தா. . தனது இடத்துக்குத் திரும்பிய மாதவன் லட்சியப் பாதையில் மற்றுமொரு மைல் முன்னேறிவிட்டோம், நமது திட்டத்திலே மேலும் ஒருபடி உயர்ந்துவிட்டோம் என்று எண்ணி மிகுந்த குது.ாகலம் அடைந்தான். ேெசந்தாவின் நட்பு ஏற்பட்டதிலிருந்து மா த வ ன் வாழ்வில் அ தி க ம | ன பசுமை பூக்கலாயிற்று. அவள் அவனுக்கு இன்பம் அளித்தாள். அவ்வப்போது இனிய உணவு தந்தாள். உ. ற் சா. க ம் மிகுந்தபோது, தனது ஞாபகார்த்தமாக இருக்கட்டும் என்று பவுண்டன் பேணுவும், வில்க் கைக்குட்டையும், ஜோரான சட்டையும் உவந்தளித் தாள். செலவுக்குப் பணமும் கொடுத்தாள். அவள் கணவன் ஏதோ பெரிய உத்தியோகம் பார்த்து வந்தார். அவர் உயரமாய், பருமளுய், தொந்தி வயிறும்