பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 50 மன்னிக்கத் தெரியாதவர் "பாலச்சந்திரன் என்ன செய்கிருன்? எப்படி இருக் அவன் சாந்திநிகேதனுக்குப் போயிருக்கிருன் படிப் பதற்காக." w ஏளும்? இங்கே உள்ள படிப்பெல்லாம் பிடிக்கலியாமா அவனுக்கு' என்று கிண்டலாகக் கேட்டான் மாதவன். அப்பாதான் அவன் அங்கே போய்ப் படிக்கட்டுமேன்னு அனுப்பி வைத்தார்." - அது சரி. பணம் இருக்குதே. அவன் அமெரிக்கா வுக்கே போய் படிக்கலாம். உம், உனக்கு எப்ப கல்யாணம்? அல்லது இதற்குள்ளாகவே ஆயிட்டுதோ?” . போங்கோ லார்: வெட்க மிகுதியால் முகம் கவிழ்ந் தாள் அவள். அம் முகத்தில் பரவிய ஆனந்தமும் நாணமும், அது குவிந்த விதமும் ரசிக்க வேண்டியனவாக அமைந்தன. அவள் திடுமெனத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். "சினிமாவிலே நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஆசை. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன்' என்ருள். "என்னது!’ மீண்டும் ஆச்சர்யம் அவனுக்கு. "சினிமாவில் நடிக்க..." உம்ம்..." என்று தலையைச் சொறிந்தான் மாதவன். தான் இங்கே இருக்கிறேன்னு உனக்கு எப்படித் தெரியும்: என்று கேட்டு வைத்தான். என்ன அசட்டுக் கேள்வி இது?’ என்பதுபோல் பேபி சிரித்தாள். இதுகூடவா தெரியாது? உங்களைப் பற்றிய விவரமெல்லாம் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். நீங்கள் நடித்த படங்களே எல்லாம் தேடிப் பிடித்து, ஆல்பத் தில் ஒட்டி வச்சிருக்கிறேன். அதுதான் எனக்கு ஹாபி' என்று உற்சாகமாகக் கூறிஞள். ~ "பரவால்லியே! எனக்கும் அழகான பக்தை' ஒருத்தி இருக்கிருன்னு சொல்லு. பேஷ்! அப்புறம்?"