பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹露 மன்னிக்கத் தெரியாதவர் கட சதா நடக்கிறதுக்குன்னு தனியா ரப்பர் செருப்பு. வெளியே போட்டுக்கிட்டுப் போறதுக்கு வேறே செருப்பு!” என்று ஒருத்தி வக்கண கொழித்தாள். இன்ைெருத்தி உற்சாகமாகச் சொன்னுள்: "அவள் ரவிக்கை போடுகிற லெட்சணத்தைத்தான் பாரேன். தோளி விருந்து ரொம்ப இறங்கியிருக்கும். வயிற்றுக்கு மேலே ரொம்ப ஏறியிருக்கும். உடம்பின் பாகங்களே எவ்வளவுக்கு அதிகம் திறந்து காட்ட முடியுமோ அவ்வளவையும் காட்டு வதிலே அவளுக்கு ஆர்வம் அதிகம்." . . . . அவள் படிக்கப் போகையிலே பார்க்கனுமே! என்ன ஸ்டைல் என்ன டிரஸ் காலேஜிலே படிக்கப் போறவசுட இவ்வனவு கர்வமாப் போகமாட்டாள்" என்ருள் வேருெருத்தி புருசன்காரன் இதை எல்லாம் பார்த்து சந்தோஷப் படத் தானே செய்கிருன்? அப்புறம் நாம் கேவி டேசி என்ன பண்ண? என்று அகிலாண்டத்தம்மாள் கூறுவது வழக்கம். சுப்பிரமணியனுக்கு சந்தோஷமாவது சந்தோஷம் தன் வாழ்வில், கிடைத் தற்கரிய பெரும் பேறு கிட்டியிருப்பதாகத் தான் அவன் நினைத்தான். ஊரிலே, உலகத்திலே இல்லாத அதிசயமாக அவனுக்குப் பெண்டாட்டி கிடைத்துவிட்டது மாதிரித்தான் அவன் அலைகிருன்! என்று அகிலாண்டத் தம்மாள் அடிக்கடி சொல்வது போலவே அவன் மனநிலையும் அமைந்திருந்தது. சுந்தரம் எல்லாரையும் மாதிரி இல்லே, அவளே தனிதான் என்று அவன் நம்பி மகிழ்ந்தான். அதல்ை அவள் விருப்பங்களே, ஆசைகளை, அவன் நிறைவேற்றத் தயங்குவதே இல்லை. அவன் அவளை அவ்வப்போது சினிமாப்பார்க்கஅழைத்துச் இது உண்டு. அது மற்றவர்களுக்கு வேடிக்கையாகப் பட்டதில்லே. ஆனல் அவன் அழைத்துச் செல்லும் விதம் தான் மற்றவர்களின் குதர்க்கப் பேச்சுக்கு விஷயம்ாகும். நடந்தோ, பஸ்ஸிலோ இருவரும் போய் வந்தால் பிறர் அவ் வனவாகக் கவனிக்கமாட்டார்கள். அவளைத் தன் சைக்கிளின் பின்பக்கம் கேரியரில் உட்கார்த்திவைத்து அவன் உற்சாகமாக