பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதேைலயே, ஆ தி யி ல் சரஸ்வதி (முற்போக்கு இலக்கியப் பத்திரிகை) ஆண்டு மலரில் முழுமையாக வெளி வந்த துணிந்தவன் கதையை, ஹீரோ என்ற பெயரில் * தீபம் இலக்கிய இதழில் மறுபிரசுரம் செய்தார் ஆசிரியர் தா. பார்த்தசாரதி. இம் மூன்று குறுநாவல்களும் "தீபம்’ பத்திரிகையில் பிரசுரமானவைதான். தீபம் இலக்கிய இதழுக்கும், அதன் ஆசிரியர் அமரர் நா. பா. அவர்களுக்கும், தீபத்துக்கு ஒளி ஏற்துவதற்காக தன்னைப் பூரணமாக அர்ப்பணித்திருந்த நண்பர் எஸ். திருமலைக்கும் என் நன்றி உரியது. என் நலனில் மிகுந்த ஆர்வம் காட்டும் அருமை நண்பர் அருள்திரு. டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் அவர்களின் அன்புதான் இக் குறுநாவல்கள், இப்போது புத்தக உருவம் பெறுவதற்கு ஆதாரமாகிறது. அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் என் வணக்கம், இக் குறுநாவல்களே நல்லமுறையில் புத்தகமாக வெளி யிடும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வல்லிக்கண்ணன்