பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26

கீங்களே; பாக்கிப் பேரெல்லாம எங்கே? இன்னும் போதை தெளியல்லியா??’ என்று கேட்டார்.

ராமன், ஆறுமுகத்தைப் பார்த்துக் கொண்டே * இல்லேங்க...?? என்று இழுக்கவுமே, 'என்ன இல்லே;...போதை தெளியல்வியா?’ என்றார் பலவேசம் பிள்ளை கிண்டலாக.

ராமன் சிரித்தபடி, அது இல்லிங்க, மாயாண்டி கணக்கப் பிள்ளை ஐயாவை இட் டாறப் போயிருக்கான்; கோவிந்தசாமி சாக்கு தெச்சுக்கிட்டிருக்கான்’’.

தொளப்பன் என்னடா ஆனான்?’ என் றார் பலவேசம் பிள்ளை ராமனைப்பார்த்து.

அவன் தயங்கியபடியே, 'காட்டுக்குப் போயி ருக்காங்காங்க?’ என்றான்.

'ஏன், நீ போறதுக்குப் பதிலா அவனை அனுப்பிட்டியாக்கும் காட்டுக்கு. ஏண்டா, உனக் குப் போய் ராமன்னு யாருடன் பேர் வெச்சது? நீ கெட்ட கேட்டுக்கு மூணு பெண்டாட்டி வேறே! கூப்பிட்ட குரலுக்கு ஒருத்தியும் ஓடி வந்து சுருட் டுக்கு நெருப்புத் தரல்லேன்னு வீட்டுக் கூரைக்கு நெருப்பு வெச்சு, லங்கா தகனம் பண்ணினவன் இல்லே நீ?", என்று பலவேசம் பிள்ளை கூறிக்