பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

61

ஒரு அன்னியன் தங்கள் கண்ணெதிரிலேயே ஒரு பெண்ணை கை நீட்டி அடித்ததைப் பற்றித் தன்னுடைய மனிதர்கள் எவ்வித கோபமோசுரணையுமோ இல்லாமல் வாளா இருப்பதைக் கண்டு அவள் வெட்கித்தாள்.

கெளரவர்கள் சபையில் சூதாடித் தோற்ற' பாண்டவர்கள் கண் எதிரிலேயே பஞ்சாலி அவ மானப் படுத்தப் பட்டது போல; கையில் கொண்டு வந்த காசை எல்லாம் குடித்துத் தீர்த்த இந்தக் குடிகாரர்கள் மத்தியில் பொன்னி அவமானப் பட்டு நிற்கிற போது கட்டிய புருஷனே கையாலாகா தவனைப் போல் மதுவில் மயங்கிக்கிடப்பதைக் கண்டபோது அவளுள் ஒரு பெரும் ஆவேசமே மூண்டது.

என்ன செய்யலாம்!” - என்று அவள் நிமிஷ நேரம் யோசிப்பதற்குள், எங்கோ குடித்துக் கொண்டிருந்த அவள் புருஷன் ஆறுமுகம் தள்ளாடியபடி அவள் எதிரில் வந்து நின்றபடி, மோனங் கெட்ட கழுதே. உன்னாலே தான் இத்தினியும் ஆசைநாயகன் பேச்சைக் கேட்டுக் கிட்டு, படை திரட்டி வந்து கடைக்கார ஐயாவை யே எதிர்த்துப் பேசlங்களா? நாளைக்கு, இவரு கடையை இழுத்து மூடிட்டாருன்னா, எங்க கதி என்ன ஆவறது மரியாதையா போலீளி வற்றதுக் குள்ளே, உன் கூட்டத்தோடு , இங்கேருந்து