உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிச்சைச் சோறு

சித்தார்த்த குமாரன் அரண்மனையை விட்டு வெளிவந்து துறவியாய் விட்டார். அரச போகங்களும் இன்ப நலங்களும் அவருக்குப் பிறப் புரிமையாக இருந்தும், அவைகளை வேண்டா மென்று உதறித் தள்ளினார். தாய், தந்தை, மக்கள், அரசுரிமை யாவும் துறந்து வந்து விட்டார். இன்ப நலங்களைக் குறைவில்லாமல் துய்த்து வந்த அவர், தமது இருபத்தொன்பதாவது அகவையிலே (வயதிலே), மனித வாழ்க்கை யின் வளமைப் பருவத்திலே, இல்லற வாழ்க்கையைப் புறக்கணித்துத் துறவுபூண்டார். ஆண்மையை விளக்கும் அழகிய மீசையையும் தாடியையும் தலை முடியையும் சிரைத்து ஆடை அணிகளை நீக்கிக் காவி உடை உடுத்துத் துறவுக்கோலம் பூண்டார். கால்நடையகவே நெடுந்தூரம் நடந்து சென்றார். ராஜகிருக நகரத்தையடைந்து நகர வாயிலைக் கடந்து ஊருக்குள்ளே சென்றார். வீதிகளில் இவரைக் கண்டோர் இவருடைய உடல் தோற்றத்தையும் முகப்பொலிவையும் கண்டு இமை கொட்டாமல் இவரையே பார்த்தார்கள். இவர் மண்ணுலகத்தில் வாழும் மனிதன்தானோ என்று ஐயுற்றார்கள். கடைத்தெரு பொருள்களை வாங்கவோரும் விற்போரும் தொழிற்சாலைகளில் தொழில் செய்வோரும் ஏனைய மக்களும் இவரை நெடுநேரம் பார்த்தவண்ணம் வியப்படைந்து நின்றனர். துறவுக்கோலம் பூண்ட சித்தார்த்தர், நேற்று வரையில் அரண்மனையில் அரச போகத்தில் இருந்தவர், இன்று கையில் திருவோடு ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்கிறார். வீட்டில் உள்ளவர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதி உணவை அவருக்கு அளிக்கின்றனர்.

நகரத்தில், பிம்பிசார அரசனுடைய சேவர்கள் முகப் பொலிவும் அழகான தோற்றமும் உள்ள இந்தப் புதிய துறவியைக் கண்டு வியப் படைந்து அரசரிடம் சென்று இவரைப் பற்றிக் கூறினார்கள். பிம்பிசார அரசன் அரண்மனையின் மாடியில் சென்று இவரைப் பார்த்தான். பர்த்த பிறகு தனக்குள் ஏதோ நினைத்து 'இந்த ஆள் எங்குச் சென்று என்ன செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்” என்று கட்டளையிட்டு அனுப்பினான்.