உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வீதியிலே வீடுதோறும் சென்று ஓட்டிலே பிச்சை ஏற்ற புதிய துறவி தமக்குப் போதுமான உணவு கிடைத்ததும் வந்த வழியே திரும்பி நடந்து நகர வாயிலைக் கடந்து வெளியே வந்தார். நகரத்திற்கு அப்பால் உள்ள பண்டவ மலையை நோக்கி நடந்தார். மலையடி வாரத்தை யடைந்ததும் கிழக்குப்புறமாக அமர்ந்து தாம் கொண்டுவந்த பிச்சைச் சோற்றைச் சாப்பிடத் தொடங்கினார். பாலும் தேனும் பாகும் பருப்பும் மணமும் சுவையும் உள்ள அறுசுவை உணவும் அரண்மனையிலே உணவாகக்கொண்டு பழகிய அரச குமாரன் சுத்தோதன மன்ன னுடைய ஒரே செல்வக்குமாரன் - தாமாகவே துறவியாகி வீடுவீடாகப் பிச்சைச் சோறு வாங்கி அதை முதன்முதலாக உண்ணத் தொடங்கு கிறார். ஒரு கவளம் கையில் எடுத்து வாயில் வைக்கிறார். வாய் குமட்டுகிறது; இந்த உணவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது; குடலைப் புரட்டுகிறது. அவர் இது வரையில் பிச்சைச் சோற்றைக் கண்ணாலும் பார்த்ததில்லை. இப்போது இதைக் கண்டு இதை உண்ண மனம் மறுக்கிறது. வாயும் வயிறும் உண்ண மறுக்கிறதைக் கண்டு இந்தத் துறவி - புத்த நிலையை யடையப் போகிறவர் - தம் மனத்திற்கு இவ்வாறு அறிவுரை கூறினார்:

66

"சித்தார்த்த! நீ செல்வம் கொழித்த சிறந்த அரச குடும்பத் திலே பிறந்து வேளைதோறும் அறுசுவை உணவுகளை உண்ணவும் தின்னவும் பழகினாய். சாலி நெல் அரிசியால் சமைத்த மணமும் சுவையும் உள்ள சோற்றை உண்டனை. அமிர்தம் போன்ற சுவையுடைய பாலும் தேனும் பாகும் பருப்பும் உட்கொண்டனை இப்படியிருந்த நீ கந்தையை உடுத்தியிருந்த ஒரு துறவியைக் கண்டு, 'நானும் இவரைப்போலத் துறவுபூண்டு, உணவை இரந்துண்டு வாழும் நாள் எப்போது வரும்; அந்த நிலையை எப்போது அடையப்பெறுவேன்' என்று நினைத்து ஏங்கினாய்: இப்போது நீ இல்லற வாழ்க்கையை விட்டு, நீ விரும்பிய துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறாய்! பிச்சைச் சோற்றைச் சாப்பிட ஏன் மறுக்கிறாய்? இதை ஏன் வெறுக்கிறாய்? நீ செய்வது முறையல்லவே. துறவிகள் உண்ண வேண்டியது பிச்சைச் சோறுதானே!”

இவ்வாறு இவர் தமக்குள் சொல்லிக் கொண்டபோது, இவர் மனத்தில் இருந்த வெறுப்பு உணர்ச்சி மறைந்தது. இந்த உணவை - இந்தப் பிச்சைச் சோற்றை முதன் முதலாக மன அமைதியோடு

உட்கொண்டார்.