உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இவ்வாறு பல நாட்கள் சென்றன. ஒவ்வொரு நாளும் சுந்தரி காலையிலும் மாலையிலும் ஐனங்கள் வரும்போதும் போகும் போதும் எதிர்ப்பட்டாள். எதிர்ப்படும் போதெல்லாம் அவர்கள் சுந்தரியை “எங்கே போகிறாய்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்பார்கள். "கௌதம புத்தரிடம் போகிறேன், இரவில் அவருடன் தங்கியிருப் பேன்” “கௌதமரிடமிருந்து வருகிறேன், இரவில் அவருடன் தங்கி யிருந்தேன்” என்று அவள் விடை கூறுவாள். ஜனங்கள் பலவாறு பேசத் தலைப்பட்டார்கள். இவளுடைய வயது, அழகு, எடுத்துச் செல்லும் பொருள்கள், செல்லும் நேரம், திரும்பும் காலம் இவையெல்லாம் மக்கள் மனத்தில் ஐயம் உண்டாக்கிவிட்டன. ‘சந்நியாசினியாகிய சுந்தரிக்கும் துறவியாகிய கௌதம புத்தருக்கும் ஏதோ கூடா ஒழுக்கம் உண்டு போல் தெரிகிறது' என்று பேசிக்கொண்டார்கள். ஊர் வாயை மூட உலை மூடியுண்டா? அதிலும், அவளே தன் வாயால் சொல்லும்போது, மக்கள் அவதூறு பேசுவதற்குச் சொல்ல வேண்டுமா! இந்தச் செய்தி நகரத்தில் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்டது. இதன் உண்மையை அறிய மக்கள் காலையிலும் மாலையிலும் அவ்வழியாக வரத் தொடங்கினார்கள். சுந்தரி, தவறாமல் அவர்களுக்கு எதிர்ப்பட்டுக் கொண்டேயிருந்தாள். நகரம் முழுவதும் இதைப் பற்றிய பேச்சு பேசப்பட்டது. பௌத்த பிக்ஷுக்களைப் பற்றியும், கௌதம புத்தரைப் பற்றியும் இழிவாகப் பேசத் தலைப்பட்டனர்.

ஒரு நாள் காலையில் சுந்தரி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய உடம்பு, ஜேதவன ஆராமத்துக்கு அருகில் குப்பை மேட்டிலே கிடந்தது. மார்பில் கத்தியால் குத்துப்பட்டுப் பிணமாகக் கிடந்தாள். இச்செய்தியறிந்து ஏராளமான ஜனக்கூட்டம் கூடிவிட்டது. சுந்தரி சார்ந்திருந்த மதத்துத் துறவிகளும் பெருங் கூட்டமாய் அவ்விடம் வந்து விட்டனர். அவர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 'எங்கள் மதத்துச் சுந்தரியை பௌத்தப் பிக்ஷுக்கள் கொலை செய்து விட்டார்கள்' என்று குற்றம் சாட்டினர். பிறகு அந்தத் துறவிகள் கூட்டமாகச் சேர்ந்து அரசனிடம் முறையிடச் சென்றார்கள். அவர்கள் பின்னே ஜனக்கூட்டம் பெருந்திரளாகச் சென்றது.

66

அரண்மனையை யடைந்து அரசன் அவைக்களம் சென்றார்கள். எங்கள் மதத்தைச் சேர்ந்தவளாகிய சுந்தரி என்னும் சந்நியாசினியை, பௌத்த பிக்ஷக்கள் கொலைசெய்து குப்பைமேட்டில் போட்டு விட்டார்கள். இது முறையா? தகுமா?" என்று முறையிட்டார்கள்.