உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

-

85

தாம் ஆனந்தரிடம் கூறியதையும் அதற்கு ஆனந்தர் மறுமொழி யாகக் கூறியதையும் பகவர், அரசனுக்குத் தெரிவித்தருளினார். அரசருக்கு உண்மை புலப்பட்டது. குடியானவன் களவு செய்தவன் அல்லன். வேறு யாரோ களவு செய்து அவன் வயலில் போட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். பகவன் புத்தர் பணப்பையைப் பார்த்த பிறகுதான் குடியானவன் அதைக் கண்டிருக்கிறான். குடியானவன் களவாடினவ னாக இருந்தால் அவ்விதமாக எல்லோர் கண்களுக்கும் படும்படி அதை வைத்திருக்க மாட்டான். இவ்வாறு யோசித்து அரசர், பகவரிடம் இவ்வாறு கூறினார்: “பகவரே! இந்தக் குடியானவன் தங்கள் திருப் பெயரைச் சான்று கூறியபடியால் உயிர் பிழைத்தான். இல்லையேல் அவன் உயிர் இன்றோடு முடிந்திருக்கும்” என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றுச் சென்றார்.

அரண்மனைக்குச் சென்று, குடியானவன் திருட்டுக் குற்றம் செய்தவன் அல்லன் என்றும், அவனை உடனே விடுதலை செய்யும் படியும் சேவகருக்குக் கட்டளையிட்டார். குடியானவன் உயிர் பிழைத்துப் பகவன் புத்தரை வாழ்த்திக்கொண்டே வீடு சென்றான்.