உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

173

மகேந்திரவர்மன் கற்பாறைகளைக் குடைந்து அமைத்த குகைக் கோயில்களில் ஒன்று மண்டகப்பட்டு என்னும் ஊரில் இருக்கிறது. இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் தாலுகாவில் உள்ள விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து, வடமேற்கே 13-மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கில் 1/2 மைல் தூரத்தில் சிறு பாறைக் குன்றின் வடக்குப் பக்கத்தில் இந்தக் குகைக் கோயில் அமைந்திருக்கிறது. இக்குகைக் கோயிலில் இருக்கிற வடமொழி சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

.4

“செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது.

وو

இந்தச் சாசனத்தின் கருத்து என்னவென்றால், செங்கல், சுண்ணாம்பு மரம் உலோகம் முதலியவற்றைக் கொண்டு கோயில் கட்டிடங்களை அமைக்கும் பழைய முறையை மாற்றி, அப்பொருள்கள் இல்லாமலே மும் மூர்த்திகளுக்குப் பாறையில் கோயிலை அமைத்தான். விசித்திர சித்தன் என்னும் அரசன் என்பது

மகேந்திரவர்மன் காலத்துக்கு முன்னே, நமது நாட்டுக் கோயில் கட்டிடங்கள் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலிய பொருள் களைக்கொண்டு உண்டாக்கப்பட்டன என்பதும், இவ்வரசன் காலத்தில் தான் பாறைகளைச் செதுக்கி உண்டாக்கப்படும் குகைக் கோயில்கள் புதிதாகச் சமைக்கப்பட்டன என்பதும் இதனால் தெரிகிறது.

குகைக் கோயிலை அமைக்கும் புதிய முறையை ஏற்படுத்திக் கட்டிடக் கலையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய மகேந்திரவர்மன். பல குகைக் கோயில்களை அமைத்திருக்கிறான். 'சென்னைக்கு அடுத்த பல்லாவரத்திலும், காஞ்சீபுரத்துக்கு அடுத்த பல்லாவரத்திலும், திருச்சிராப்பள்ளி மலையிலும், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம், மாமண்டூர், தளவானூர், சித்தன்னவாசல் முதலிய ஊர்களிலும் இவ்வரசன் அமைத்த குகைக்கோயில்கள் உள்ளன.5

5

மகேந்திரவர்மனுக்குப் பிறகு, அவன் மகன் மாமல்லனான நரசிம்மவர்மனும், அவனுக்குப் பின்னர் பரமேசுவரவர்மன் முதலியவர்களும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சாளுவன் குப்பம்