உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

325

மதங்கள் பல சமய நூல்களைக் கொண்டிருந்தன. அந்த மதங்கள் பிற் காலத்தில் குன்றிப்போய் மறைந்தபோது அச்சமய நூல்களும் மறைந்து போயின. ஆதரிப்போர் இருந்தால்தானே அவை வாழ்ந்திருக்கமுடியும்? அம்மதங்கள் மறைந்த காரணத்தினால், ஆதரிப்போர் இல்லாமல், அந் நூல்கள் மறைந்துபோயின. அம் மதத்தவர் அல்லாத ஏனைய மதத்தார், சமயப் பகை காரணமாக அந்த வேறு மத நூல்களைப் போற்றாமல் விட்டனர்.

குண்டலகேசி, விம்பசார கதை. சித்தாந்தத் தொகை திருப்பதிகம், புத்த ஜாதகக் கதைகள் முதலிய பௌத்த நூல்களும், ஜைன இராம யணம், வளையாபதி, கிளிவிருத்தம், எலிவிருத்தம், சாந்தி புராணம், மல்லி நாதர் புராணம், நாரதசரிதை, பிங்கல கதை, வாமன கதை, பிங்கல கேசி அஞ்சனகேசி, காலகேசி, தத்துவ தரிசனம், முதலிய ஜைன சமய நூல் களும் இவ்வாறு மறைந்துபோன நூல்களாம். மணிமேகலை, சிலப் பதிகாரம், சிந்தாமணிபோன்ற பௌத்த சமண சமயக் காவியங்களைச் சைவவைணவ சமயத்தார் போற்றிக் காப்பாற்றி யதன் காரணம், அவை இலக்கிய வளம் படைத்த காவியங்கள் என்னும் காரணம் பற்றியே. இவ்வாறு ஒருசில பௌத்த சமண சமய நூல்கள், அவற்றின் இலக்கியச் சிறப்புப் பற்றிப் போற்றிக் காப்பாற்றப்பட்டன என்றாலும் பௌத்த ஜைன சமயங்களின் ஏனைய நூல்கள் எல்லாம் மறைந்துபோயின.

மூடக்கொள்கை

சமயப் பகைமையினால் சிலபல நூல்கள் அழிந்தது போலவே, மூடக்கொள்கையினாலும் பல நூல்கள் அழிந்தன. பதினெட்டாம் பெருக்கு, கலைமகள் விழாவாகிய சரசுவதி பூசை, மாசிமகம் போன்ற காலங்களில் ஏட்டுச்சுவடிகளைக் கடலிலும் ஆற்று வெள்ளத்திலும் போடுகிற வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த மூட வழக்கம் சமீபகாலம் வரையிலும் இருந்தது. கல்வி அறிவில்லாத வர்கள், தங்கள் வீடுகளில் தமது முன்னோர் சேமித்துவைத்த ஏட்டுச் சுவடிகளைக் கற்கும் ஆற்றல் இல்லாமல், அச்சுவடிகளை ஆற்று வெள்ளத்தில்விட்டனர். இதுபோன்ற மூடத்தனம் உலகத்திலே எந் நாட்டிலும் காணமுடியாது. சிலர் ஏட்டுச் சுவடிகளை அடுப்பில் இட்டு எரித்ததும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்தாற்போல, கல்வி யறிவற்றவர் கையில் கிடைத்த ஏட்டுச்சுவடிகள் இவ்வாறு அழிந்தன.

66

கற்பூர வாசனை கழுதைக்குத் தெரியுமா?”