மறைந்துபோன தமிழ் நூல்கள்
7தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துதவினா னாகுமாற் - பிற்பிற் பலரேத்துஞ் செம்ம லுடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை யியையுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருப செய்பவோ
தாமேயும் போகு முயிர்க்கு.
71
20
நமையுள்ளு நல்லவை யெய்தார் பகைநலிய
வேற்றுக் களத்தி லொருவர்த மாறாகச்
சென்றா லொருவர்மேற்
புண்ணும் படுக்கலான் றான்படான் போந்தாரக்
கண்ணும் படுங்கொல் கவன்று.
21
வேற்றானை வெள்ள நெரிதர யாற்றுக்
கடும்புனற் கற்சிறை போல நடுங்காது
நிற்பவற் கல்லா லெளியவோ
பொற்பார்
முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர்
அறியுந ரென்னுஞ் செருக்கு.
22
பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க்
குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு
முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற்
குற்றுழிக் காவா தவர்.
23
பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா
இரவே யெறியென்றா யென்னை - விரைவிரைந்து
வேந்தனீ யாயினா யன்றிப் புகுவதோ
போந்தென்னைச் சொல்லிய நா.
24
வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை
யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும்
விலங்கா லொருகைத்தால் வெல்கைநன் றென்னும்
நலங்காணே னாணுத் தரும்.
25
காலாளாய்க் காலா ளெறியான் களிற்றெருத்தின்
மேலா ளெறியான் மிகநாணக்
-
காளை