உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி: பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19 கேலிக்கூத்துக்கு ஆளாகக் கூடாது. (வேகமாக நடக்கிறான்.)

பார்த்தாயா, தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் அகப்பட்டுவிட்டது. என்னைக் கண்டவுடன் அந்தப் பயல் அச்சங்கொண்டு வேகமாக நடந்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதிலிருந்து பாத்திரத்தைத் திருடி னவன் அவன் தான் என்பது உறுதியாகிறது. (ஓடிச் சென்ற பிக்குவை வழி மறிக்கிறான்) திருட்டுப் பயலே! எங்கே போவாய்?

இல்லை. காபாலிக சகோதர! இப்படி எல்லாம் பேசுவது சரியல்ல. (தனக்குள்) எவ்வளவு அழகுள்ள நங்கை இவள்!

ஓய்! பிக்ஷு. உன் கையில் இருப்பதைக் காட்டு. உன் சீவாப் போர்வையில் பொதிந்து வைத்திருப்பதை நான் பார்க்க வேண்டும்.

பார்க்க அதில் என்ன இருக்கிறது? அது ஒரு மண்டை. என்னுடைய பிக்ஷைப் பாத்திரம்.

அதைத்தான் நான் பார்க்கவேண்டுமென்கிறேன். இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே அதை நாங்கள் மூடி மறைத்துக் கொண்டு போக வேண்டும். உனக்கும் இது தெரிந்ததுதானே.

ஆம்: பொருள்களை இப்படி மறைத்துக் கொண்டு போவதற்காகத்தான் புத்தர், நீண்ட சீவரம் தரித்துக்

கொள்ளச் சொன்னார்.

ஆமாம். உண்மை தான். நீர் சொல்லுவது சத்தியம். அது சம்விரதிசத்தியம்.2 நான்பரமார்த்த சத்தியத்தை12 அறிய வேண்டும்.

நன்று, நன்று. உன்னுடைய கேலிப் பேச்சு போதும். பிக்ஷைநேரம் கடந்து விடுகிறது. நான் நான் போக வேண்டும். (அப்பால் நடக்கிறான்)