பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
4-ம் படை : என்பெயர் சாத்தன். சுவாமி!
நாரா:
முதற் படை:
நாரா:
ஓகோ!
எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்?
பத்தைஞ் ஞூறுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல்.
65 பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு.
2-ம் படை: வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல்
நாரா:
நாணமும் நோவுமாம் நாரா யணரே !
வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ! அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை...
முருகா!
75
எத்தனை பேரால் ஏலுமிக் காவல்?
முதற் படை:
நாரா:
நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி.
அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின்
இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக்
80 காட்டுதி எனக்கு.
முதற் படை:
நாரா:
(தனதுள்)
247
காட்டுவன் ஈதோ!
(அணிவகுத்துக் காட்ட)
வாயில் -கோட்டை வாயில்,
திறத்தார்-வலிமையுள்ளவர்.
புரையற்றோர்-குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும்.