334
சுந்:
அருள்வரதன்:
யாவ:
அருள்:
ஜீவ:
சுந்:
புரு:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
(யாவரும் புருடோத்தமனைச் சூழ:
சுந்தரர் கூட்டம் விலக்க.)
நின்மின்! நின்மின்!
(அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர)
அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்!
(புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து நின்று காக்க)
படையுடன் பாதகன்!
(விலங்குடன் குடிலனைக் காட்டி)
(பின்னிட)
பாதகன் ஈங்குளான்.
குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி! 200 அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்!
பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில். வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங் 205 கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா!
ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட 210 எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும் தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும்
வஞ்சியான் வஞ்சியான்
—
வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்ய
மாட்டான். தெருட்ட - தெளிவுபடுத்த. வந்துழி – வந்தபோது.