314
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6
தோற்றமிகு முக்கூறில் ஒருகூறு வேண்டும்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
கடனாகைக் காரோணம் மேவி இருந்தீரே.
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாந் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையன் என்றறிய ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து
அணிஆரூரனை மறக்கலும் ஆமே?
உழக்கேஉண்டு படைத்தீட்டி வைத்திழப்பார்களும் சிலர்கள் வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதிமாந்திய மாந்தர் சழக்கே பறிநிறைப்பாரொடு தவமாவது செய்மின்
கிழக்கே சலமிடுவார் தொழுகேதாரம் என்னீரே.
இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
ஒன்றலா உயிர்வாழ்க்கையை நினைந்திட்டு உடல்தளர்ந்து அருமாநிதி இயற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யெனவே நினைஉளமே
குன்று நிலாவிய புயமுடையானைக்
கூத்தனைக் குலாவிக் குவலயத் தோர்
6
7
00
9
சென்றெலாம் பயில் திருத்தினை நகருள்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.
10
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி