384
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6
சிகரங்கள் போன்மடியத் தெள்ளாற்றுக்
கண் சிவந்தான் தென்னன் தொண்டி
நகரங்கைப் படுத்த பிரான் நந்திநர
பதிபணிகோ னங்கள் கோவே.
38
ஷ வேறு
நங்கள்கோத் தொண்டை வேந்தன்
நாமவேல் மன்னர்க் கெல்லாம்
தங்கள் கோனங்க நாடன்
சந்திர குலப்ர காசன்
திங்கள் போற் குடையி னீழல்
செய்ய கோல் செலுத்து மென்பர்
எங்கள்கோல் வளைகள் நில்லா
விபரித மிருந்த வாறே.
கட்டளைக் கலித்துறை
39
ஆறா விறலடு போர்வன்மை யாலம் ராடியப்பாற்
பாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக்
கூறா ளிவளிளங் கொங்கை யவன்வளர் தொண்டையல்லா
னாறா திவடிரு மேனியு நாமென்கொ னாணுவதே.
40
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நாணா தித்திரு மடவார் முன்புநின்
நன்பொற் கழலிணை தொழுதாரிற்
பூணா கத்தொளிர் பொலனாகச் செய்த
புதுமென் தொண்டைய தருளாயே
வாணா ளைச்சுளி களியா னைப்படை
வயவே லடையலர் குலகாலா
கோணா மைக்கொரு குறையுண் டோவுரை
கொங்கா நின்னது செங்கோலே.
41