பக்கம்:மருதநில மங்கை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை133


பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிளின் 10
மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண்,
சூடின, இருங்கடல் முத்தமும், பன்மணி பிறவும் ஆங்கு
ஒருங்குடன் கோத்த உருளமை முக்காழ் மேல்
கரும்பார் கண்ணிக்குச் சூழ் நூலாக,

அரும்பவிழ் நீலத்து ஆயிதழ் நாணச் 15
சுரும்பாற்றுப் படுத்த மணிமருள் மாலை,

ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்
செல்வுறு திண்தேர்க் கொடுஞ்சினை கைப்பற்றிப்
பைபயத் துரங்கும் நின்மெல்விரல் சீறடி

நோதலும் உண்டு, ஈங்கு என்கை வந்தீ; 20
செம்மால் ! நின்பால் உண்ணிய,

பொய்போர்த்துப், பாண்தலையிட்ட பலவல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான்வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாகத் திரிதரும்

நுந்தையால் உண்டி சில. 25
நுந்தைவாய், மாயச்சூள் தேறி மயங்குநோய் கைமிகப்
பூவெழில் உண்கண் பனிபரப்பக், கண்படா
ஞாயர்பால் உண்டி சில.

அன்னையோ! யாம்எம்மகனைப் பாராட்டக் கதுமெனத்
தாம் வந்தார் தம்பா லவரொடு; தம்மை 30
வருகென்றார் யார்கொலோ ஈங்கு?

என்பாலல், பாராட்டு உவந்தோய்! குடியுண்டீத்தை, என்
பாராட்டைப் பாலோ சில.
செருக்குறித்தாரை உலகைக் கூத்தாட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/135&oldid=1129824" இலிருந்து மீள்விக்கப்பட்டது