பக்கம்:மருதநில மங்கை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22


ஊடுதல் என்னோ?

ணவன் பரத்தையர் உறவு கொள்ளத் தொடங்கினான். மனைவி அதனால் அவனை வெறுத்தாள். அவனைக் காணவும் நாணினாள். அக்கவலை வருத்த வருந்தித் தன் தோழியோடு வாழ்ந்திருந்தாள். ஒருநாள் பரத்தை வீடு சென்றிருந்த அவள் கணவன், அவள் வீட்டிற்கு வந்தான். வந்தானை வரவேற்க விரும்பாது, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் சினம் கண்டு செய்வதறியாது சிறிது நேரம் சிந்தித்தவாறே நின்றிருந்தான் கணவன். பின்னர் மெல்ல மெல்ல அவள் அருகிற் சென்றான். சென்று அவள் கூந்தலைக் கையாற் பற்றி, அவள் தலையைச் சிறிதே தடவிக் கொடுத்தான்.

கணவனைக் காணவும் விரும்பாது வாழும் அவள், அவன் தன் கூந்தலைக் கையாற் பற்றியதை உணர்ந்தவுடனே, அதை அவன் கையினின்றும் விரைந்து ஈர்த்துக் கொண்டாள். அவ்விடம் விட்டுப் பெயர்ந்து ஒதுங்கினாள். “ஏடா! உன்னைக் காணவும் வெறுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/144&oldid=1130015" இலிருந்து மீள்விக்கப்பட்டது