பக்கம்:மருதநில மங்கை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை141


குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்
தந்தைவியன் மார்பில் பாய்ந்தான், அறன் இல்லா
அன்பிலி பெற்ற மகன்.

தலைவி, தன் மகனுக்கு அவள் தந்தைக் குணங்களுள் கொள்ளலாம் குணம் இவை, தள்ளலாம் குணம் இவை எனக் கூறிக்கொண்டிருப்புழிப் பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் வந்து நின்றானாக, மகன் அவனை அடைந்தமை கண்டு, தலைவி வருந்திக் கூறி ஊடல் தீர்ந்தது இது.

1. மைபடு– கருநிறம் பொருந்திய; மழகளிறு–இளைய யானை; ஓடை–முகபடாம்; 2. கயந்தலை–மெத்தென்ற தலை; 3. பொலம்செய்–பொன்னாற் செய்த; 4. நலம் கிளர்–அழகுமிக்க; ஒண்பூண்–ஒளிவீசும் அணி; 5. ஆர்–நிறையுமாறு; காண்பின்–காண்டற்கு இனிய; துகிர்மேல்–பவழப்பலகைமீது; 6. செம்பாகம்–சரிபாதி; 7. கடிஅரணம்–காவல்மிக்க கோட்டை; 8. தொடியோர்– தொடி அணிந்த மகளிர்; உழக்கி– அழித்து, அடிஆர்ந்த–காலில் கட்டிய; 10. போர்யானை காதல் மிகுதியால் மகனை யானை என்றாள்; வந்தீக–வருக; 12. நிலைப்பாலுள் – நிலைபெற்ற குணங்களுள்; ஒத்தி– ஒப்பாயாக; 13, கன்றியகோபித்த; தெவ்வர்–பகைவரை; கடந்து வென்று; களம் கொள்ளும்–போர்க்களத்தைத் தனதாக்கிக் கொள்ளும்; 15. ஒன்றினேம்–மனம் ஒன்றுபட்டோம்; 17. பால்–ஒருபால்; ஒருவர் பக்கத்தில்; பகல்–எவருக்கும் ஒப்பக் காயும் ஞாயிறு; ஒல்கா–தளராத; 19. கால்பொரு–காற்றால் அலைப்புண்ட; 21. வீதல்–கெடுதல்; நச்சியார் – விரும்பினவர்; 24. நோய்கூர–நோய் மிகுமாறு; 25. கழற–இடித்துரைக்க; 27. வந்தித்தனர்–வந்தனர்; 28. தாவாதவருத்தம் செய்யாத; காவாது–வரவிடாது தடை செய்யாது; 29. ஈந்தை–கொடுப்பாயாக; சீத்தை–இகழ்ச்சிக் குறிப்புடையதோர் இடைச்சொல்; 30. கன்றி–வெறுத்து, அதனை–மகள் தந்தையால்’ அணைவதை; கைநீவி–கைகடந்து; 31. கோண்மா–சிங்கம்; இவர்ந்தாங்கு பாய்ந்ததுபோல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/143&oldid=1130013" இலிருந்து மீள்விக்கப்பட்டது