பக்கம்:மருதநில மங்கை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140புலவர் கா. கோவிந்தன்


“மைபடு சென்னி மழகளிற்று ஓடைபோல்
கைபுனை முக்காழ் கயந்தலைத் தாழப்,
பொலஞ்செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலங்கிளர் ஒண்பூண் நனைதரும் அவ்வாய்
கலந்துகண் நோக்குஆரக், காண்பின் துகிர்மேல் 5
பொலம்புனை செம்பாகம் போர்கொண் டிமைப்பக்
கடிஅரணம் பாயா நின்கைபுனை வேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடியார்ந்த
தேரைவாய்க் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்
போர் யானை வந்தீக ஈங்கு. 10
செம்மால்! வனப்பெலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப்பாலுள் ஒத்தகுறி என்வாய்க் கேட்டு ஒத்தி;
கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி,
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை, நுந்தைபோல் 15
மென்தோள் நெகிழ விடல்.
பால்கொளல் இன்றிப் பகல்போல் முறைக்கு ஒல்கா
கோல் செம்மை ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி,
கால்பொரு பூவின் கவின்வாட நுந்தைபோல்
சால்பு ஆய்ந்தார் சாய விடல். 20
வீதல்அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர்மென் நோக்கின் மகளிரை நுந்தைபோல்
நோய்கூர நோக்காய் விடல்.
ஆங்க, திறன் அல்ல யாம் கழற, யாரை நகும் இம் 25
மகன் அல்லான் பெற்ற மகன்?
மறைநின்று, தாம் மன்ற வந்தித்தனர்.
ஆயிழாய்! தாவாத எற்குத் தவறுண்டோ? காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்குச், சீத்தை! யாம் கன்றி, அதனைக் கடியவும் கைநீவிக் 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/142&oldid=1130012" இலிருந்து மீள்விக்கப்பட்டது