பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

31



ஹார்விக்கும் : சிக்கல்கள் சில!

இவ்வாறு இதயத்தை ஹார்வி ஆராய்ந்தபோது, ஒரு சிக்கல் அவருக்குப் புலப்பட்டது. அது என்ன சிக்கல்?

மனிதனுடைய நாடித் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 முறைகள் துடிக்கும். ஒவ்வொரு வெண்டிக்குகளும் இரண்டிரண்டு அவுன்சு ரத்தம் உடையனவாகும். அதனால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் இடது வெண்டிக்குகள் 144 அவுன்சு குருதியை, அயோர்டாவில் பாய்ச்சுகிறது. அதாவது, 60 நிமிடத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு 8640 அவுன்சு ரத்தம் அயோட்டாவில் பாய்ச்சப் படுகிறது.

இவ்வளவு எடையுள்ள ரத்தம் எங்கிருந்து வருகிறது? என்பதுதான் ஹார்விக்கே புரியாத ஒரு சிக்கலாக இருந்தது. அதனால், இடைவிடாமல் தொடர்ந்து அவர் அதை ஆராய்ந்து சிக்கலைக் கண்டுபிடித்தார்.

இரத்தம் இதயத்திலிருந்து அயோர்டா வழியாக வெளியே தள்ளப்படுகிறது என்றும், பிறகு, சிரைகள் வழியாக வந்து சேருகின்றது என்றும், ரத்தம் ஒரே சுழற்சியில்தான் உள்ளது என்பதையும் ஹார்வி கண்டுபிடித்தார்.

இதய இயக்கம் : என்ன என்று கூறினார்!

இரத்தம் ஒரே சுழற்சியில் இருந்தாலும், அவற்றிற்கு அசைவு உண்டாக வழியில்லை என்பதையும் உணர்ந்தார் ஹார்வி.

இதயத்திலிருந்து அயோர்டா வழியாக வெளியேறிய ரத்தம், பிறகு சிரை வழியாக நுரையீரல் தமனி மூலமாக இதயத்திற்குப் போய் சேருகிறது - இதயம் ஒரு முத்ல்யு பம்ப் போல வேலை செய்கிறது என்ற உண்மையை முதன் முதலாக மருத்துவ உலகுக்குக் கூறியவர் ஹார்விதான் ஆகும்.

கருவிலிருந்து கல்லறை போகும் வரை இதயம் துடித்துக் கொண்டே இருக்கிறது. உடலின் முழு பகுதிகளுக்கும் உரிய