இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
128
மருமக்கள்வழி மான்மியம்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ?
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாற நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!!
100
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும் இந்நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!!
வெண்பா
காரணவன்.... தெப் போகல்யாணம் செய்வதெப்போ
வாரமிகு மக்களொடு வாழ்வதெப்போ-தாரணியில்
எல்லா ரையும் போல் இருப்பதெப்போ....
........நாம்.
முற்றும்