உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்க்கை


1. நாஞ்சில் நாட்டு வேளாள சகோதரர்களுக்கு
ஒரு கோட்டை வினாக்கள்
[1]

குறிப்பு: ஒவ்வொருவரும் கேள்விகளுக்கு விடை கண்டு மனச் சாக்ஷியைத் திருப்தி செய்துகொண்டால் போதுமானது.

1. ஓர் உத்தமமான மருமக்கள்வழிக் குடும்பத்தின் லக்ஷணங்கள் என்ன? நாஞ்சில் நாட்டில் எக்காலத்திலாவது அவ்வித குடும்பங்கள் ஏற்பட்டிருந்ததுண்டா?

2. குடும்பங்களின் நிலைமை முற்காலத்தில் எப்படி யிருந்தது? தற்காலத்தில் எப்படி யிருக்கிறது? பல குடும்பங்களின் சரித்திரங்களையும் ஆராய்ந்து விடை நிதானிக்க.

3. நாஞ்சில் நாட்டு வேளாளர்-மருமக்கள் வழிக்-குடும்பத்திற்கும் நாயர்-குடும்பத்திற்கும் வித்தியாஸம் உண்டா?

4. நாஞ்சில் நாட்டார் ஆதிகாலந்தொட்டே மருமக்கள் வழியை அனுசரித்து வருகிறார்களா அல்லது இடைக்காலத்தில் அதைக் கைக்


  1. ஒரு கோட்டை என்பது இருபத்தொரு மரக்கால் கொண்ட முகத்தலளவை. இது நாஞ்சில்நாடு, திருநெல்வேலிப் பிரதேசங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. இருபத்தொரு கேள்விகள் அடங்கியிருப்பது கருதி இவ்வினாக்களின் தொகுதி 'ஒரு கோட்டை வினாக்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வினாக்கள் தோன்றிய விவரம்பற்றி இந்நூல் முன்னுரையில் (பக்-19) கூறியுள்ளது காண்க.

ம. மா—9