உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மருமக்கள்வழி மான்மியம்

கொண்டிருப்பவர்களா? சரித்திர ஆதாரத்துடன் விடை காண்க.

5. தம் தரவாட்டு க்ஷேமமொன்றையே முக்கிய ஜீவித நோக்கமாகக் கொண்டு உழைத்துவரும் காரணவர்கள் இப்பொழுது நாஞ்சில் நாட்டில் எத்தனை பேர் இருக்கக்கூடும்?

6. பொதுவாக ஒரு காரணவன் இறக்கும்போது குடும்பத்தின் செல்வ நிலை எப்படியிருக்கிறது? அவன் குடும்ப பரணம் கையேற்ற காலத்தில் இருந்ததைவிட விருத்தி யடைந்திருக்கிறதா? அல்லது மோசமாயிருக்கிறதா? காரணம் என்ன?

7. தகப்பனால் முன்வந்திருக்கும் மக்கள் அதிகமா? அல்லது காரணவனால் முன் வந்திருக்கும் மருமக்கள் அதிகமா? ஒவ்வொன்றிலும் நூற்றுக்கு எத்தனை வரும்?

8. நாஞ்சில் நாட்டில் பெரும்பாலாரும் தகப்பனுடைய ஊரில் வீடுங் குடியுமாயிருக்கிறார்களா? அல்லது தங்கள் காரணவன் குடும்ப வீட்டில் இருக்கிறார்களா?

9. குடும்ப முதலைக் கறம்பி மக்களுக்குக் கொடுக்கும் காரணவர்களின் தொகை அதிகமா? அவ்வாறு கொடுக்காதவர்களின் தொகை அதிகமா?

10 வியவகார மில்லாத குடும்பங்கள் நூற்றுக்கு எத்தனை வரும்?

11. காரணவனும் அதந்திரவர்களும் ரம்மியமாக இருக்கிற குடும்பங்கள் ஏதாவது இருக்கிறதா?