உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

27

ஞர்கள் கூறுவார்கள். இந்நெறியைச் சாந்தநெறி என்று சொல்லலாம். பிறிதொரு நெறி உக்ரநெறியென்று சொல்லலாம். தீமைகளையும் குற்றங்களையும் கண்டவுடன் ஆசிரியனது உள்ளங் கொதித்துப் பொங்குகிறது; எரிமலையினின்று பொங்கி வழியும் நெருப்பாறுபோலக் கண்டனச் சொற்கள் பரந்து பாய்கின்றன. இந்நெறியில் அருவருப்பு எளிதில் உண்டாகும்படியாய் உண்மை சிறிது மிகுத்துக் கூறப்படுவதாகும். லத்தீன் ஆசிரியருள் ஜூவெனல் (Juvenal) என்பவர் இந்நெறியைக் கையாண்டமையால் இதனை ஜூவெனலியன் (Juvenalian) நெறியென்று கூறுவார்கள்.

பிள்ளையவர்களோடு பழகியவர்கள் மேற்சுட்டிய இரண்டு நெறிகளுள் சாந்த நெறியை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அந்நெறி அவர்கள் நோக்கத்தை நிறைவேற்ற வல்லதல்ல. அவர்கள் கூறுமாறு:

காரணத் தீனம் கடிய தீனம்
கண்டூரத்தில் மருந்து கருத்தாய்க்
கொடுத்தா லன்றிக் குணம் ஆகாது
                                (நாகாஸ்தி. 79-81)

ஆதலால் உக்ரநெறியே கைக்கொள்ளத் தக்கதாயிற்று. இந்நெறி தம் இயல்பிற்கு முற்றும் மாறாயுள்ளது; இதற்கு ஏற்றதொரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டித்துக் கதையும் ஒன்று அமைப்பது இன்றியமையாததாய் முடிந்தது.

கதையைச் சொல்லுவது சூத பௌராணிகரா? அல்ல. அவருக்கு நாஞ்சினாட்டுக் குடும்பத்தினரின்