இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. மறைந்து கிடக்கும் மனிதசக்தி
வாயும் வயிறும்
மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகா சக்தியைப் போல் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லை.
அவ்வாறு இல்லையென்றால், காட்டிலே மிருகங்களுக்கு ஆதிகாலத்தில் இரையாகிப் போனவர்கள், இன்று அவை
களை ஆட்டிப் படைத்து, அடிமையாக்கி அரசாண்டு கொண்டிருப்பார்களா?
வெறும் வாயுடன், விரிந்து கிடக்கும் சமுத்திரம் போன்ற வயிற்றுடன் மட்டும், ஒவ்வொரு மனித உடலும் பிறந்துவிடவில்லை. உள்ளுக்குள்ளே ஒராயிரம் சக்திகளை உருவாக்கி, உருட்டித் திரட்டிக் கொண்டு தான், ஜெகத் திலே ஜனித்திருக்கின்றன.
ஆனால், அந்த அபாரமான அறிவாற்றலை, அற்பத் தனமான சுகத்திற்கும்; அழிந்து போகும் பணத்திற்கும்,
விணாக செலவழித்துக் கொண்டு, மிருகங்களாய் அலைகின் றார்கள் மனிதர்கள்.