பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 1 5


நல்ல வழிகாட்டியாக ஒரு பயிற்சியாளர் இருந்து ஆட்டால், அவரைப் பின்பற்றும் இளைஞர்கள் பெறுகிற இன்பமும் எழுத்திலடங்காத ஒன்றாகும்.


இராமருக்குக் கிடைத்த குரு வசிஷ்டர் போல, பயிற்சி யாளர்களும் இருந்திட வேண்டும்.


கெட்டதைக் கற்பிக்க வேண்டியதே இல்லை. அது வெகு விரைவாக வந்து யாரிடமும் இடம் பிடித்துக் கொள்ளும்.


நல்லதைக் கற்பிக்க நாளாகும். சிரமங்கள் பன தோன்றும், ஏற்பவர்களும் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பார்கள்.


இருந்தாலும், குருபீடத்தில் இருக்கும் பயிற்சியாளர்கள் எல்லோரும், தங்களது குறைகளை மறைத்துக் கொண்டும், கெட்டப் பழக்கங்கள் இருந்தாலும், மாணவர்கள் மத்தியில் செய்யாமல் மறைவாகச் செய்தும், நல்ல வழிகாட்டினால், அவருக்கும் பெருமை. நாட்டுக்கும் நன்மை.


9. முக்கியமானவர்கள்


பயிற்சியாளர்கள், பயிற்சிபெற வந்திருப்பவர்களிடம்


அவர்களுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் அரிய திறமைகளைக்


கண்டு பிடித்து, வெளிக் கொண ரு ம் விதத்தை தெரிந்த


விற்பன்னர்களாக விளங்குகின்றார்கள்.


திறமைகள் வெளிப்பட்டு, அவர்கள் தேர்ச்சி பெறுகிற பொழுது, மற்ற சாதாரணமானவர்களை விட சற்று மேம் பட்டவர்களாகவே விளங்குகின்றார்கள்.


அவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிக்கும், இருக்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாநிலத் திற்கும் வெற்றி பெறு வதன் மூலம், புகழ் சேர்த்துத் தருபவர்கள் ஆவார்கள்.