பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

41



ஏதாவது காயம்பட்டால், உடலிலிருந்து வெளியாகும் இரத்தத்தை அதிகமாக வெளியிடாமல், உடனே உறைந்து கொள்கின்ற (clot) சக்தியை இரத்தம் வளர்த்துக் கொள் கிறது.


3. இரத்தக் குழாய்களில் சிரை (Artery) எனும் பகுதியில் ஏற்படும் பலஹlனத்தைப் போக்குகிறது. இரத் தக் குழாய்களில் தங்கி வளர்கின்ற கொலஸ்ட்ரால் எனும் வேண்டாதக் கொழுப்புச் சக்தியைக் குறைத்து. இரத்தக் குழாய்களை வலிமைப்படுத்துகிறது.


4, இதயம் வலிமை பெறுகின்றது. அதிகமாக உடலுக்கு இரத்தத்தை இறைக்கும் பணியில் ஈடுபடுகிற இதயமானது, அளவில் பெரிதாகவும் ஆற்றலில், வலிமை யானதாகவும், வளர்ச்சியையும் எழுச்சியையும் பெறு கின்றது. இதயத்தைத் திறமுள்ளதாகவும், தரம் உள்ள தாகவும் மாற்றியமைக்கின்ற மந்திர சக்தியை ஒட்டம் அளிக்கிறது.


5. நுரையீரல்கள் நேர்த்தியான, நிறைவான நிலை யினைப் பெறுகின்றன. நுரையீரல்கள் நிறைய உயிர்க் காற்றைப் பெறவும், அவசியமற்றக் காற்றை அதிகமாக அகற்றி விடவும் போன்ற பொறுப்பான பணியிலே, சிறப் பான உச்சநிலையை எய்துகின்றன.


உயிர்க்காற்றின் சக்தியின் உன்னதத்தால், ஆஸ்த்மா , எம்பிசியா போன்ற நோய்கள் நொறுக்கப்படுகின்றன. நுண்மையான மேன்மையான ஆற்றலை நுரையீரல்கள் அடைகின்றன.


6. தசையின் விசைச் சக்தி மேம்பாடு அடைகிறது. நினைத்தவுடன் செயல்படும் தசைகளின் வேகத்தைத்


- 3