உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் – 11

இயற்கையிலேயே இடுகிய இடையின் மேல் கீழ் நடு என்னும் மூன்று பகுதிகளும் இன்னும் மிகுதியாய் ஒடுங்கிப் போய்விட்டன, வண்ணமும் வெளிறின - உடம்பின் பல பகுதிகளிலுள்ள நிறங்களும் வெளுத்துவிட்டன, தோளும் வாடின தோள்களுஞ் சோர்வுற்றன என்றவாறு.

உருக்கிளர் இளந்தளிர் உலரத் தீய்த்திடு பொருக்கெனுந் தீவளி பொருந்த வாடிய மருக்கமழ் மல்லிகை போன்ற மாதர்பால் இரக்கமும் இன்பமும் ஒருங்கெ ழுந்தவே,

-

இரண்டு

(14)

(இ-ள்) உருக்கிளர் இளம் தளிர் உலரத் தீய்த்திடும் - நிறம் விளங்கும் இளந்துளிர்களை ஈரம் இல்லையாகத் தீய்த்துவிடும், பொருக்கெனும் தீவளி பொருந்த வாடிய - விரைய வந்து வீசுந் தீக்காற்று மேலே படுதலால் வாடிப்போன, மருக்கமழ் மல்லிகை போன்ற - மணங்கமழும் மல்லிகைப் பூவையொத்த, மாதர்பால்- மங்கையாகிய சகுந்தலையினிடத்து, இரக்கமும் இன்பமும் ஒருங்கு எழுந்த - அவளது அழகிய மேனியின் வாட்டத்தைக் காண்டலால் அவள்பால் இரக்கமும் அவ்வாட்டம் என்பால் வைத்த காதன்மிகுதியால் உண்டாயிருக்கலாமென்று எண்ணுதலால் இன்பமும் ஒரே காலத்தில் என்னுள்ளத்தில் உண்டாயின எ ன்றவாறு ஏ : அசை.

வேனில் கழிந்த வுடனே விரிகடல்நீர்

வானம் பருகி வருகார்நாள் மன்னுயிருக் கானா மகிழ்வு தரல்போல் அடுங்காதல்

ம்

ஏனை எனக்கும் இன்பம் பயந்ததுவால்.

(15)

-

-

கோடை காலங்

-

(இ-ள்) வேனில் கழிந்த உடனே - கடந்தவுடனே, விரி கடல் நீர் - அகன்ற கடலினது நீரை, வானம் பருகி மேகமானது குடித்து, வரு கார்நாள் வருகின்ற கார்காலத்தில், மழையை நோக்கும், மன் உயிருக்கு நிலை பெற்ற உயிர்களுக்கு, ஆனாமகிழ்வு அடங்காத மகிழ்ச்சியினை, தரல்போல் - தருவதுபோல், அடும்காதல் - வருத்துகின்ற காமப் பேரன்பானது, ஏனை எனக்கும் - இது காறுங் காத லின்னதென்றே யறியாமையின் அதற்கு வேறான எனக்கும், இன்பம் பயந்தது - இன்பத்தை உண்டாக்கியது; ஆல் : அசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/101&oldid=1580058" இலிருந்து மீள்விக்கப்பட்டது