தமிழ் மலை
155
கவிராயராலும், 1861 இல் ஆறுமுக நாவலராலும் வெளியிடப் பட்டன. அடிகளார் குறிப்பிடும் கல்வி நிலையையும், அக் காலத்தில் அச்சில் வெளிவந்த இந்நூல் தொகுதிகளையும் ஒப்பிட்டு நோக்கினார், அச்சில் வெளிவந்த நூல்களை யெல்லாம் அடிகளார் திறமாகக் கற்றுத் தெளிந்தார் என்பது புலப்படும். ஐங்குறுநூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் என்பன 1903 முதல் 1918 வரை வெளிவந்தன ஆகலின் தம் இளந்தைக் கல்வியில் இவற்றைச் சுட்டினார் அல்லர் அடிகளார். இவையும் பிறவும் பின்னே கற்றவையாம்.
மதுரை நாயகம் :
ஆசிரியர் நாராயண சாமியாரின் மாணவர்களுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். அவர் ஒரு சாலை மாணவர் ஆதலின், மறைமலையார்க்குப் பேரன்பராக விளங்கினார். அவர் திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரரின் உறவினர். திருச்சியைச் சேர்ந்த அவர் நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியான வெளிப்பாளையத்தில் இருந்தார்; மறிப்பர் (அமீனா) என்னும் வேலை பார்த்தார். அகவையால் தந்தையனையார்! அடிகளார் அவரைத் தந்தை யுரிமையராய்க் கொண்டு பழகினார். அவர் அடிகள் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் ஊட்டி வளர்த்தார்.
வெளிப்பாளையத்தில் திருமாலிய (வைணவ)ப் பேரவை ஒன்று இருந்தது. அவ் வவையில் சொற்பெருக்காற்றிய ஒருவர் மாலியப் பெருமையுரைக்கும் அளவில் நில்லாமல். சிவனியப் பழியும் உரைத்தார். இதனைக் கேட்ட சிவனியப் பெரும் பற்றாளராம் மதுரை நாயகர் அப் பொழிவை மறுத்துரைக்க அவாவினார்.
சோமசுந்தர நாயகர் :
அந்நாளில் சோமசுந்தர நாயகர் என்பார் ஒருவர் சன்னையில் இருந்தார். அவர்தம் சைவ வீறும், பிற சமயக் கொள்கைகளைச் சூறைக்காற்றில் பறக்கும் சருகெனச் சுழற்றி யடி க்கும் திறமும் அறிந்து சேதுநாட்டு வேந்தர் 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என விருது தந்து விழா எடுத்துப் போற்றினர். அதனால் சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் எனச் சமய உலகில் பேருலா வந்து பெரும்புகழ் கொண்டு