உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

167

அல்லரோ அவர்; அவர் தாமே, சென்னைக்கு அழைத்துத் தம்பால் இருக்கவும் அமைத்துக் கொண்டவர். ஆதலால், அவரை அணுகித் தம் விருப்பை உரைத்தார். "அப்பன் உனக்கு ஓர் ஆசிரியர் கற்பிக்க வேண்டிய நிலை இல்லையே. நீ நன்கு கற்றுள்ளாயே” என்று நாயகர் கூறினார். “மெய்ப்பொருட் கல்வி சிறக்க மேதக்க குருவர் வேண்டும்” என்னும் மரபு நெறிகூறி, நாயகரை இசைவித்தார் அடிகளார். அவ்வகையில் சைவசித்தாந்த நுணுக்கங்கள் பலவற்றை அடிகள் அவரிடம் அவரிடம் அறிந்து ம் கொண்டார்.

அறிவுத் துணையாக மட்டுமல்லாமல் நாயகர் குடும்பப் பிணைப்பமைந்த தந்தையார் போலவும் அமைந்தார். அவர்தம் துணைவியார் தம் மகவாகவே அடிகளைப் புரந்தார். நாயகரும் அடிகளும் ஓரிரு நாள்கள் காணாவிடினும் தாங்க ஒண்ணாராய் நான் முந்தி நீ முந்தி என இல்லந் தேடிவந்து விருந்து உண்டு விரும்புவ பேசிச் சென்றனர். கூட்டங்களுக்கும் கோயில்களுக்கும் இணைந்தே செல்வதுடன் இணைந்தே பொழிவும் ஆற்றினர். நாயகரும் அடிகளும் உருவும் நிழலுமென இயைந்து இந்நிலை நெடிது செல்ல வாய்க்கவில்லை.

நாயகர் மறைவு :

-

நாயகர் 22-2-1901 இல் இயற்கை எய்தினார். தாயாய் தந்தையாய் - தனிப் பேராசிரியராய் தாழா நண்பராய் தாங்குதலாய் இருந்த நாயகர் பிரிவு அடிகளாரை அசைத்தது; உலுக்கியது; உருக்கியது. ஊனும் உளமும் உணர்வும் நெகிழ அழுது தேம்பினார் அடிகள். அடிகள். அழுகை வாட்டாகியது; உணர்வாளர் அழுகையும் அரற்றும் அவலமும் பாட்டாதல் புதுவன அல்லவே! பண்டுதொட்டு வரும் ‘கையறு நிலையும் இரங்க'லும் இவைதாமே! அடிகளார் அழுங்கல் ‘சோமசுந்தரக் காஞ்சி’ ஆயது.

சோமசுந்தரக் காஞ்சி :

காஞ்சியாவது நிலையாமை. நில்லாத்தன்மை அமைந்த உலகியலைச் சொல்லும் திறத்தால் சொல்லி, நிலைபெறு செயலைச் செய்யத் தூண்டுவது காஞ்சியின் உட்கிடை நாயகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/200&oldid=1580157" இலிருந்து மீள்விக்கப்பட்டது