உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

183

போக்குகள் உண்டு. அவற்றிற் சில தப்பாகவோ சரியாகவோ சாந்தம்மாள் சொல்வதை மீறாமை, அவ்வப்போது நூல்கள் விற்றுப்பணம் அனுப்பில், வரும் தொகைகளைச் சவுந்திரம் கையில் கொடுத்துப்பின் தாம் வாங்குதல்; எந்தச் சிறு செயல் களையும் சவுந்திரத்தைக் கேட்டே செய்தல் முதலியவாம் என்கிறார். (மறைமலையடிகள் வரலாறு 72-74)

வாழ்வியல் மேலாய்வு :

கனி,

விளையாட்டுப் பருவக் குழந்தையின் செய்கைபோல் கருதத் தக்கது அன்று இது! வேடிக்கைச் செய்தியும் அறிவறியாத் தன்மையும் அன்று! அன்று! அடிகளார் ஆழ்ந்த மூளைக் கூர்ப்புக்கும், கடும் உழைப்புக்கும் ஓய்வு பெறும் ‘மாசில் வீணை' மாலைமதி, வீசுதென்றல், வீங்கிளவேனில், மூசுவண்டறை பொய்கை இவையே! இன்னும் சொன்னால் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தரு, தருநிழல், நிழல் கனிந்த ஓடை யிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று இன்னவெல்லாம் தம்மை மறந்து, தாமே குழந்தையாய் மாறி நிற்கும் அடிகளார் செய்கையேயாம்! சிலர் ஆடலில் - சிலர் பாடலில் சிலர் காட்சியில் - சிலர் உலாவலில் - சிலர் பிறபிற வழிகளில் மன அமைதி பெறுவர்; வாழ்வின் வெம்மையை மாற்றிக் கொள்வர். அடிகளாரோ இவ்வினிய வகையை மேற்கொண்டார்! இம் மேற்கோள் அவர்தம் பணிச் சீர்மைக்கு ஏந்தாக அமைந்ததென்க. அடிகளார் நாள்வழிக் கடமைகள் எப்படி?

நாள்வழிக் கடமை :

66

-

ம்

காலையில் எட்டு மணிக்குத் துயிலில் இருந்து எழுவார்.” இதனைப் படித்ததும் அடிகளாரா அப்படி! வைகறைப் போதில் தனைப்படித்ததும் எழாரா? விடிந்தும் இரண்டு மணிப் பொழுதும் நடந்த பின்னரா எழுவார்? என வினவத் தோன்றும்! நாள்வழிக்கடமைகளை முழுதுறக் கண்டு பின் எண்ணங்களை ஆய்வில் ஓடவிடுக:

எட்டு மணிக்கு எழுந்த அடிகள் பாதக் குறடு இட்டவாறே சிறிது பொழுது, பொதுநிலைக் கழக மாளிகையைச் சுற்றியுள்ள பூங்காவில் உலாவுவார். பிறகு ‘எனிமா’ வைத்துக்கொண்டு குடல் தூய்மை செய்வார்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/216&oldid=1580173" இலிருந்து மீள்விக்கப்பட்டது