உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

221

அவரைத் தோனாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அறுவை மருத்துவம் செய்து 27-4-44இல் அரங்கர் மீண்டார். திரும்பும் போதே சோர்ந்திருந்த அரங்கர் பாளையங் கோட்டைக்கு வந்து படுத்தார்! மீள எழுந்திருக்க வில்லை! 28-4- 44 இல் உலகை விட்டுப் பிரிந்தார்!

நீலாம்பிகையார் நிலைமை என்ன? தம் காதல் தலைவ ருக்காக ஒன்பான் ஆண்டுகள் காதல் தவம் கொண்டவர் அல்லரோ அவர்! எப்பாடு பட்டிருப்பார்! அவர் தம் உ நிலைதான் என்ன! மெலிந்தது! நலிந்தது! அவரால் ஓராண்டும் தாங்க இயலவில்லை! 5-11-45 இல் இயற்கையொடும் ஒடுங்கினார்! வொடுக்கங்கள் அம்மையையும், அப்பர் ஆகிய அடிகளையும் விட்டு வைக்குமோ?

அடிகள் தம்மக்களுள் நீலாம்பிகையார்மேல் கொண்ட பேரன்பு இணையற்றது; உடன் பிறந்தாரும் பொறாமை கொள்ளும் அளவு மிக்கது! தம் தமிழ் வாழ்வே அம்மகவு’ எனக்கண்ட - தம் தமிழ்த் தொண்டின் வழியே அவர்’ எனக்கண்ட அடிகளார்க்கு அமைதியுண்டாகுமோ?

நீலாம்பிகையாரின் அன்னை சவுந்திரம் அம்மையார் நோயர் ஆனார்! படுக்கையர் ஆனார்! மூன்றாண்டுகள் அளவு நோயொடு போராடிக்கிடந்த கிடையாய் அமைந்து வாராப் பெருநடையும் கொண்டார்.அந்நாள் 24-5-50!

-

6

பேரன்புப் பெருந்துணை ஒப்பற்ற துணை - என நின்ற அம்மையார் பிரிவு அடிகளைப் புண்மீதில் அம்பு பாய்ச்சிய கொடுமைக்கு ஆளாக்கிற்று! மோதும் வெள்ளத் திடையே பட்ட உப்பு மலை எத்துணைக் காலம் தாங்கும்! அம்மையார் மறைவின் பின் அடிகள் மூன்று திங்கள் அளவே மண்ணில் உலாவினார்! இறுதியாவணம் :

6

15-8-1950 இல் அடிகள் நோயெனப் படுத்தார். ஒரு கிழமை கஞ்சியும் பழச்சாறும் பருகினார். மருத்துவப் பேரறிஞர் குருசாமியார் வந்து பார்த்தார்.அடிகளுக்கு “ஈரற்பை வீங்கியுள்ளது; இனிப் பிழைப்பது அருமை என்றார். அடிகளின் இல்லமருத்துவர் ஆனந்தர் மருந்து தந்து பேணினார். அடிகள் அம்பலவாணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/254&oldid=1580211" இலிருந்து மீள்விக்கப்பட்டது