உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் – 11

பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர்

மறைமலை அடிகளால் வேண்டப்படும் சீர்திருத்தக்

குறிப்புகள்

உண்மை அன்பர்கள் வற்புறுத்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, இக்காலத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிலவற்றை இங்கு

சீர்திருத்தக்குறிப்புகள்

காட்டுகின்றோம்.

சமயச் சீர்திருத்தம்

எடுத்துக்

தென்னாட்டிலுள்ள தமிழர்களாகிய நாம் தொன்றுத் தொட்டு ஒரே முழுமுதற்கடவுளை வணங்கி வருகின்றோம். அம்முழுமுதற் கடவுளுக்குச் 'சேயோன்', 'மாயோன்' ‘முக்கண்ணன்’, என்னும் பெயர்கள் வழங்கிவந்திருக்கின்றன. இச்சிறப்புப் பெயர்களாற் குறிக்கப்படாதபோது, 'வாலறிவன்’, ‘மலர்மிசை யேகினான்’, 'வேண்டுதல் வேண்டாமை யிலான்’, 'பொறிவாயிலைந்தவித்தான்’, ‘தனக்குவமை யில்லாதான்' ‘அறவாழியந்தணன்’, ‘எண் குணத்தான்”, ‘இறைவன்’, ‘கடவுள்’

என்னும் ம் பொதுப்பெயர்கள் பொதுவாக எல்லாராலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய கடவுள் பிறப்பில்லாதது, இறப்பில்லாதது, எல்லாமறிவது, எங்குமுள்ளது, எல்லாம்வல்லது, அளவிலாற்றலுடையது, வரம்பிலின்ப முடையது, என்னும் இலக்கணங்கள் உடையதென்பது இத்தமிழ்நாட்டிலுள்ளவர்கள் எல்லாருக்கும் உடன்பாடாகும். இஃது எல்லாவற்றையும் படைத்து அழிக்கும் அப்பனாகவும், படைத்தவற்றைக் காக்கும் அம்மையாகவும் வணங்கப்பட்டு வருகின்றது. இத்தன்மைத்தாகிய கடவுளையே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், மாணிக்கவாசகரும், திருமூலரும், அப்பர் சம்பந்தர் சுந்தரரும், மெய்கண்டதேவரும் தாம் அருளிச் செய்த நூல்களிலும் பதிகங்களிலும் எடுத்து விளக்கி வணங்கிவந்திருக்கின்றார்கள்.

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச்சிவபெருமான் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/289&oldid=1580250" இலிருந்து மீள்விக்கப்பட்டது