இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாமணிக் கோவை
7
ஓம்
திருச்சிற்றம்பலம்
மறைமலையடிகளார்
பாமணிக் கோவை
1
இலங்கைத் தீவின் அருகேயுள்ள கோட்டை மன்னாரில் திருவானைக்கூடத்தின்கண் திருக்கோயில் கொண்டு
கலித்துறை
எழுந்தருளியிருக்கும்
சித்தி விநாயகப் பெருமான்
பண் (இசை : ஆரபி)
திருவார் மேலைத் திருக்குறை மன்னர் செய்கோட்டை ஒருபால் மேய நன்னகர் மன்னார் உறைவீரால் தருபால் வேண்டுந் தன்மக விற்குத் தாய்செய்யும் பெருவார் அன்பிற் பின்னையும் மிக்க பெரியீரே.
பிறைசேர் சென்னித் தந்தை யமர்ந்த பெருமைத்தாய் நறைசேர் பாலின் நற்றடம் மேய நன்மைத்தா
(1)
அறைசேர் வண்கே தீச்சுரஞ் செல்லும் அடியார்க்கு முறைசேர் மன்னார் முன்னிருந் தின்பம் முயல்வீரால்.
(2)
முன்நின் பின்னோன் வள்ளியைக் கூட முயன்றாற்போல் பின்நின் அன்பன் அப்பெயர் பெற்றான் பேரின்பம்