இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
225
ஐந்தாம் நிகழ்ச்சி : எட்டாங் காட்சி
களம்
- பிருதாபருத்ரன்
மண்டபம்
அரண்மனையின்
னையின் பூங்கா
காலம் : காலை பத்து நாழிகை
தனை?
பிரதாபருத்ரன் : அடே மாதவா! யாது, செய்தி கொணர்ந்
காவலாளி : மன்னர் பிரான் நீடு வாழ்க! தென்னாட்டி லிருந்து கம்பர் என்னுந் தமிழ்ப் புலவர் தங்களைக் காண வந்து நிற்கின்றார்.
!
பிரதாபருத்ரன் : ஆ! கம்பரா! அவருடன் வேறெவ ரேனும் வந்திருக்கின்றனரா?
காவலாளி : ஆம், அரசே! அவரின் மகன் போலக் காணப்படும் ஓர் இளைஞரும் இளைய மங்கையர் இருவரும் அவருடன் வந்திருக்கின்றனர்.
பிரதாபருத்ரன்
- அவர்களைப் பணிந்து உடனே ங்கழைத்துவா (அங்ஙனமே அவன் போய் அவர்களை அழைத்து வந்துவிட, அரசன் கம்பரை வணங்கி) புலவர் பெருமானே, தாங்கள் அடியேனின் சிறுகுடிலுக்கு எழுந் தருள யானும் என் சுற்றமும் யாது தவஞ் செய்தோம்! தாங்கள்
ராமாயணத்’ தைத் தமிழ்ப் பாவிற் பாடித் திருவரங்கத்தில் அரங்கேற்றிய சிறப்புகளை யெல்லாந் தென்னாட்டிலிருந்து இங்கு வந்து செல்லும் புலவர்மணிகள் பலர் பலகாலுஞ் சொல்லக் கேட்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். பிறவிக் குருடன் சடுதியிற் குருடுதீர்ந்து கட்பார்வை பெற்றாற்போல,