இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
238
❖ LDMMLDMOLD-12 →
(அதுகேட்டு மூவருந் திடுக்கிட்டு மகிழ்ச்சிக் குறி காட்டுகின்றனர்.)
அரசி : நீலம், எப்பொழுது திருமணம்? எங்ஙனம் முடிவு செய்திருக்கின்றனர்?
நீலம் : அம்மா, நாளைமுற்பகல், அரசவையில் அம்பிகாபதியார் சிற்றின்பப் பொருள் சிறிதும் விரவாமல் பேரின்பப் பொருளே முழுதும் விளங்க நூறு செந்தமிழ்ப் பாப்பாடல் வேண்டுமாம்; அங்ஙனம் அவர்பாடி முடித்த பின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடு செய்யப்படுமாம்.
அரசி : (கவலையுடன்) நல்லது! அங்ஙனம் பாடும் நூறு பாக்களில் எங்காயினுந்தப்பித் தவறித் சிற்றின்பப் பொருள் கலந்து விட்டால்?
நீலம் : அதைப்பற்றி
என்ன முடிவு
செய்தார்க
என்பது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அமராவதி : அம்மா, அதனை நாமே சென்றிருந்து நேரே
கண்டு தெரிவோமே.