240
❖ LDMMLDMOLD-12 →
அம்பிகாபதியின் பாட்டு
கூறினமையின், இப்போது இ அரசவையில் நடந்து கொண்டிருக்கின்றது! நின் தந்தையார்
கவலையுள்ளத்துடன் அரசவையின் முடிவினை எதிர்
6
பார்த்துக் கொண்டிருக்கின்றார். யான் அங்கிருக்க மனமின்றி, உனக்கதனைத் தெரிவித்துப் போகவே இங்கு வந்தேன்.
காவேரி : (மனம் மருண்டு) என் அன்பே, தாங்கள் தெரிவித்த இது நன்றாய் முடியுமோ? வேறாய் முடியுமோ தெரிவியுங்கள்! என் நெஞ்சம் ஒரு நிலைப்படாது குழம்பு கின்றது!
நயினார் : (திகைபுற்று) யான் ஏது சொல்வேன் கண் மணி? எனக்கொன்றுமே தோன்றவில்லை. (வாயில் முகமாய்த் திரும்பி) யாரோ மிகு விரைவாய் உள்ளே வருவதாய் அறி கின்றேன்.
(சோழன் மகன் திடுமென இருவர்க்கும் எதிரே வந்து நின்று)
அரசிளைஞன் : ஏ! நயினார்! இங்கே என்ன செய்கின் றாய்? சிறையினின்றும் நீ விடுவிக்கப்பட்டதனைக் காவேரிக்கு அறிவிக்கவந்தனயோ?
நயினார் : ஆம் ஐயா! நல்லது, நீங்கள் இங்கு வந்தது எதற்காகவோ?
அரசிளைஞன் : நானும் அம்பிகாபதியைப் பற்றிய செய்தியைக் காவேரிக்கு அறிவிக்கவே இங்கு வந்தேன்.
காவேரி : (துடித்து) அண்ணால், என் தமையனைப் பற்றிய செய்தியை விரைந்து அறிவியுங்கள்! என் உள்ளங் கலங்குகின்றது.
அரசிளைஞன் : கலங்காதே! நின் தமையனுக்கு என் தங்கையை மணஞ்செய்விக்கவே என் தந்தையார் அரசவை யில் அமைச்சர்களுடன் கலந்து பேசிக்கொண்டிருக்கின்றார். (நயினாரை நோக்கி) நோக்கி) ஆசிரியர் கம்பரிடம் நான்பேச வேண்டுவதொன்றிற்காக அவர் வரும்வரையில் நான் இங்கே காத்திருக்க வேண்டும். நீ நின் இல்லத்திற்கு ஏகலாம். (நயினார்