உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

மறைமலையடிகளார் தலைமைப் பேருரைமேல் நிகழ்ந்த

சில தடைகளுக்கு விடை

முகவுரை

(16.5.1929இல் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற சைவற் மாநாட்டில் அடிகளார் ஆற்றியது)

திருப்பாதிரிப்புலியூரிற் கூடிய சைவர் மகாநாட்டில் யாம் அவைத்தலைவரா யிருந்து நிகழ்த்திய தலைமைப் பேருரைக்கட் போந்த சிலகருத்துக்களுக்கு மறுப்பாகத் 'தலைமைப் பேருரையாராய்ச்சி' என்னும் என்னும் ஒரு கட்டுரை திரு. பொ. முத்தையா பிள்ளை என்பவரால் எழுதப்பட்டுச், 'சித்தாந்தம்’ என்னும் திங்கள் தாளிலும் “சிவநேசன்” என்னும் கிழமைத் தாளிலும் வெளிப்படுத்தப்பட்டது.

பழந்தமிழ் நூல்களிலுந், தமிழ்ச்சைவ நூல்களிலும் ஆழ்ந்து நிறைந்த கல்விகேள்விகளுடையார், எமது தலைமைப் பேருரையினையும் அதன்மேலெழுந்த மறுப்பினையும் நடு நின்று ஒத்து நோக்குவார்களாயின், அவர்கட்கு நமது தலைமைப் பேருரையின் பொருள்கள் ஆசிரியர் தொல்காப்பியனார்முதல்வந்த நம் பண்டைச் செந்தமிழ்ச் சான்றேர்களாற் கைக் கொள்ளப் பட்டு, நம் தமிழ்நாட்டவரை அன்பிலும் ஒற்றுமையிலும் இன்புற்று வாழச்செய்து வழங்கியவைகளாதலும், அதற்கு மறுப்பாய் எழுந்தபொருள்கள் பண்டிருந்த நம் தமிழ்நாட்டவரால் ஒரு சிறிதுங் கைக்கொள்ளப்படாமற், பின் வந்து குடியேறிய ஆரியர் தம்மைப் பலவகையாலும் உயர்த்தி நம் தமிழ் மக்களைப் பல வகையாலுந் தாழ்த்தி அவர் தம் வாழ்க்கையினைச் சீர்குலைத்தற் பொருட்டுக் கட்டிய சாதி வேற்றுமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/148&oldid=1583673" இலிருந்து மீள்விக்கப்பட்டது