உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

  • மறைமலையம் -16

புராணப் பொய்யுரையும் என்னும் மயக்கில் வீழ்ந்து தமக்கென அறிவிலரான போலிச் சைவரும் அவர்வழி நிற்பாருங் கைக்கொண்டு, மேலும்மேலும் நந்தமிழ்நாட்டைப் பாழ்படுத்து வனவாதலும் நன்கு விளங்கா நிற்கும். அவ்வாறு ஆழ்ந்து நிரம்பிய கல்வியில்லாதார், குறுகிய நோக்கத்தாலுஞ் சாதிச் செருக்காலும் எழுதப்பட அம்மறுப்பின் பொய்ப்பொருள் கண்டு மயங்காமைப் பொருட்டு, அம்மறுப்பின்கட் போந்த வற்றை ஈண்டெடுத்துக் காட்டி அவை தீய வாதலை விளக்கு வாம்.

1. காதலுஞ் சாதியும்

காதலன்புடையார்க்கு அக்காதல் அன்பின்வழியே மனஞ் செல்லுமல்லாமல், மனத்தின்வழியே காதல் செல்லாமை ஆன்றோர் செய்யுள் வழக்கினுள்ளும் உலக வழக்கினுள்ளும் வைத்துச் செல்வனே அறியக்கிடந்ததொன்றும். காதலென்பது ஒருவர் ஒருவரை இன்றியமையாராய் விழைந்துநிற்கும் பெரு வேட்கையாய், ‘எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய் நாண்வழிக் காசுபோலவும் நீர்வழி மிதவைபோலவும் பான்மைவழி யோடி இருவரையும் புணர்விக்கும்' திறத்த தென்பது ஆசிரியர் தெய்வப் புலமை நக்கீரனார் இறை யனார்அகப் பொருளுரையில் விளக்கிய வாற்றான் நன்கு விளங்கும். இவ்வுண்மை வ்வுண்மை எமது தலைமைப் பேருரையில் எடுத்துக் காட்டப்பட்ட பரிபாடற் செய்யுளிற் போந்த “காதற் காமம் காமத்திற் சிறந்தது” என்பதனாலும் நன்கு புலனாம். வையெல்லாம் நல்லாசிரியரை அடுத்து உணரும் பேறு வாயாத மறுப்புரைகாரர், மனஞ்சென்றவாறு சென்று துய்ப்பதே காதலின்பமெனக் கரைந்தார். மனஞ்சென்றவா றெல்லாஞ் சென்று துய்ப்பது இழிந்த காமஇன்பமே யாமென்பதும், அவ்விழிந்த காமத்தினையே ஆன்றோர்க ளெல்லாரும் வழுவெனக் கொண்டா ரென்பதும் அம்மறுப்புரைகாரர் உணரார் கொல்லோ விழுப்பமுந் தூய்மையும் வாய்ந்த காதலன்பின் வயப்பட்டார் இருவர் தம்முள் ஒருவரை யொருவர் உயிர்போல் நினைந்துருகி ஒழுகுந் தன்மைய ராதலின் அவர்மனம் அவர் தங்காதலன்பின் கீழடங்கி நின்று வேறு பிறர்பாற் செல்லாதாகலின், காதலன் புடையார்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/149&oldid=1583678" இலிருந்து மீள்விக்கப்பட்டது