136
மறைமலையம் 16
நிற்பர். இல்லறத்தின்வழிச் செல்லாத துறவு, நிலைபேறின்றிச் சீர்குலையும் என்பதற்கு அத் துறவிமார்தங் காமக் கரவொழுக் கமே சான்றாம். இவ்வுண்மை கண்டு தெய்வத் திருவள்ளுவர் அவர் தங்கொள்கையை மறுத்தற் பொருட்டே இன்பத்தின் வழித்தாகிய இல்லறத்தை முன்வைத்து நூல்செய்ததூஉம்,
“அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்”
(குறள்-46)
என்றும்,
"இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாருந் தலை
(குறள்-47)
என்றும்,
66
“ஆற்றினொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து”
(குறள்-48
என்றும்,
66
‘அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயினன்று”
(குறள்-49)
என்றும்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்”
(குறள்-50)
என்றும் அவர் இல்லறத்தைத் தமிழ்ச் சான்றோர் வழக்குப் பற்றித் துறவறத்தினும் மிக்கெடுத்துக் கூறியதூஉமென்க.
இனி, இன்பத்தின் வழித்தாகிய இல்லறத்தைத் தெய்வத் திருவள்ளுவனார் முன்வைத்து நூல்யாத்தமையின், அவர் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தார் என்று எமது தலைமைப் பேருரையிற் கூறினாமன்றி, இல்லாளொடு கூடிநுகரும் இன்பமும் அவர் இல்லற இயலிற் கூறினாரென மொழிந்திலேம். வ்வாறாகவும், இன்பநுகர்ச்சிக்கு அவர் முதன்மை தந்தார் என யாம் மொழிந்தேம் எனப் பிழைபடக்கொண்டு, அம் மறுப்புரைகாரர் தமக்கும் தோன்றியவாறெல்லா மெழுதினார். இன்பமும் இன்பநுகர்ச்சியும் வேறாதலை உணர்ந்திருந்தன