உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 16

பெறப்படுகின்றதா என்பதை ஆன்றோர்கள் ஆய்ந்து பார்க்கக் கடவர். அறிஞரால் அன்பராற் சாதிவேற்றுமை கருதப்பட வில்லை யென்பதற்கு, அப்பர் அப்பூதியடிகளின் அளவளாவு தலையாம் எடுத்துக் காட்டினேமாக, அதனை மறுப்பான் புகுந்தவர், சாதி வேற்றுமையினையே பெரிது பாராட்டி அறிஞர்கள் தம்முள் அளவளாவுதலை யொழிந்தார் என்றன்றோ காட்டுதல் வேண்டும்; அதனை விடுத்து எடுத்த பொருளுக்கு இயைபில்லாதவைகளை யெழுதி ஏமாற்றப் பார்ப்பது முறையாகுமா? வழக்குமுறை இன்னதென்றே யறியமாட்டாத இவர், தம்மைத் தருக்க முணர்ந்தாராகக் காட்டுதற் பொருட்டுத் தருக்கநூற் சொற்களையுங் குறியீடு களையும் எடுத்தாளுதல், அந்நூலுணர்ச்சி யில்லாரை மருட்டுதற் பொருட்டே யன்றி வேறென்னை? அது கிடக்க. இவர் கூறியது கொண்டே சாதிவேற்றுமை ஆன்றோர் தமக்கு உடம்பாடா ா காமை காட்டுதும். இவர் கூற்றின்படி அப்பராகிய வேளாளர் இழிகுலத்தினர்; அப்பூதியடிகளாகிய பார்ப்பனரே உயர் குலத்தினர். அப்பூதியார் தம் சாதி வரம்பு கடந்து, தம்மிற் றாழ்ந்த அப்பரைக் குருவாகக் கொள்ளலாமோ?

அவர்

தம்மை அங்ஙனம் கொண்டாலும், இழிகுலத்தவராகிய அப்பர் தாம் அவரைத் தமக்கு மாணாக்கராக ஏற்றுக் கொள்ள லாமோ? அன்றி ஏற்றுக்கொண்டாலுந் தம்மோடு உடனிருந்து உண்ணுக வன்று அவரை ஏவலாமோ? அவர் தாம் ஏவினாலும், உயர்குலத்தவராகிய அப்பூதி அதற்கு இசைய லாமோ? அன்பிலும் அறிவிலும் நற்குண நற்செய்கைகளிலும் பார்ப்பச் சாதியே யுயர்ந்ததென்று கூவித் திரியும் அம் மறுப்புரைகாரர் கொள்கை உண்மையாயின்,

அக்

காள்கையினை ஆன்றோராயினார் ஆன்றோராயினார் கைக்கொண்டோ ழுகியது மெய்ம்மையாயின், அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கு அளவளாவியது அவர் தமக்கே குற்றமாதலோடு உலகத் தார்க்கும் ஆகாததொன்றாய் முடிக்கப்படுதல் வேண்டுமன்றோ? மற்று, அவ் விருவர்தஞ் சேர்க்கையோ அங்ஙனங் குற்றமாவ தொன்றாய் ஆகாமல் அவர்க்கு நன்றாயினாற் போல, உலகத்தார்க்கும் நன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, பிறப்பளவிற் கொள்ளுஞ் சாதி யுயர்வு இழிவுகள், அன்பும் அறிவும் நற்குண நற்செய்கையும் இல்லாமற் வெற்றுப் பேச்சும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/193&oldid=1583889" இலிருந்து மீள்விக்கப்பட்டது