உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

167

படிவித்துப் பெயராப் பேரின்பம் நுகர்விப்பது சிவம் என்னுஞ் சைவசித்தாந்த உணர்ச்சியுடைய எம்மனோர்க்கு அக் கதை ஒரு சிறிதும் மெய்ம்மை யுடையதாகத் காணப்படா தென்றொழிக. மேலுந், தூயராய்த் தன்னடி சேர்ந்தாரைப் பிழைபடுத்து ஒறுக்குங் கடவுள் உலகத்தார்க்கு அறிவிப்ப தொன்றும் உண்டுகொலோவென அம் மறுப்புரை காருரையினை அறிவுடையார் நகையாடி விடுப்பரென்க.

15. நாயன்மாருஞ் சாதிவேற்றுமைச் சிதைவும்

இனி, அன்பினால் அளவளாவும் பெரியார் சாதிவேற்றுமை யினைக் கைக்கொள்ளாமையும், இறுமாப்பும் அறியாமையும் உடைய இழிந்த மக்களே அதனை விடாப்பிடியாய்க் கைக்கொண்டு பலவாற்றால் அல்லலுழத்தலும் யாம் எமது தலைமைப் பேருரையில் நன்கு விளக்கி, வேளாளராகிய அப்பரும் பார்ப்பனராகிய அப்பூதிகளும் சாதிவேற்றுமை யினைச் சிறிதும் நினையாது ஒருங்கு அளவளாவிய உண்மை நிகழ்ச்சியினையும் எடுத்துக் காட்டினோம். மற்றுச், சாதி வேற்றுமையானது அறிவுடையாராலும் அன்பராலுங் கைக்கொள்ளப்பட்ட சிறந்த முறையாகும் என நாட்டப் புகுந்த அம் மறுப்புரைகாரரோ, அவ்வாறு செய்தற்கு எந்த அறிவு நூலிலும் ஆன்றோர் நடையிலுஞ் சான்று காணாமையிற் பெரிதும் இடர்ப்பட்டுத், தாமும் ஒரு மறுப்பெழுதி விட்டதாகத் தம்மை யொத்தார் குழுவிற் சொல்லித் தமக்கு

ஒரு

பொய்ப்பெருமை தேடிக்கொள்ளுதலையே குறியாய்க் கொண்டு, அப்பரும் அப்பூதிகளும் அளவளாவிய நிகழ்ச்சிக்கு ஒரு போக்குக் காட்டத் தலைப்பட்டார். அப்பரை அப் பூதியடிகள் குருவாய்க்கொண்டன ராகலின், அவர் ஏவிய படியே அப்பூதி அவரோடு உடனிருந்து உணவு கொண்டனர். அவரை அவர் அங்ஙனங் குருவாய்க் கொள்ளாராயின் அப்பர் அவரை அங்ஙனம் ஏவுதலுந் தம்மைக் குருவாகக் கொள்ளு மாறு அவரை வலுக்கட்டாயஞ் செய்தலும் இழி பிறப்பாள ராகிய அவர்க்குத் தகா என்று அம் மறுப்புரைகாரர் கூவினார்.

இவர் கூவிய இப்பொருளில் மொழியாற், சாதிவேற்றுமை யானது அறிஞர்க்கு உடம்பாடுதா னென்பது சிறிதாயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/192&oldid=1583884" இலிருந்து மீள்விக்கப்பட்டது