உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் 16

பிரானுக்கும் அம் மறுபபுரைக்காரர் மறதிக் குற்றத்தை ஏற்ற மாட்டாரென்று நம்புகின்றோம்.

னித், திருக்கைலையில் நிகழ்ந்தனவாக அக்கதை கூறும் நிகழ்ச்சிகள் உண்மையாயின், அங்கிருந்தும் இம் மண்ணு லகிற்குப் போந்தவராக நுவலப்படுஞ் சுந்தரரன்றோ அந் நிகழ்ச்சிகளை நினைத்து மொழியற்பாலார்? சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நேரே காணும் பெருந்தவமுடையராய், இறைவனருளாற் செயற்கரும் புதுமைகள் பல செய்த பெரியா ராகலின், அவர் தம்முடைய முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்த வராகவே யிருப்பரன்றி, அவற்றை மறந்தவராக இரார். அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களில் அவர் தம் வரலாற்றுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன; ஆனால், திருக்கைலையில் அவர் மாதரைக் காமுற்று அதன் பயனாக மண்ணுலகிற் பிறந்தனரெனக் கூறும் அக் கதைக் குறிப்போ ஓரெட்டுணை யாயினும் அத் திருப்பதிகங்களிற் காணப்படுகின்றிலது.

இனி, அவர் அம்மாதரைக் காதலித்தது. திருவருட்செய லென்றும், எத்துணைப் பெரியாரும் பிழைசெய்யின் ஒறுக்கப் படுவரென்பதனை இறைவன் உலகத்தார்க்கு அறிவிப்பவே அவரை இம் மண்ணின்மேற் பிறப்பித்து ஒறுத்தனன் என்றும் அம் மறுப்புரைகாரர் கரைந்தார். இவர்தம் சைவ நூலுணர்ச்சியின் திறனை என்னென்பேம்! தன்னை யணுகித் தூயராய் நிற்கும் ஒருவரைத் தூயவல்லாதன இறைவன் அருட்செயல்! தூயராயினாரையும் பிழை படுத்துவதே

றைவன்றன் அருட்செயலாயின், தூயராகி இறைவனைச் சார்தலாற் பயனென்னை? ‘சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்' என்று சைவசித்தாந்த நூல் ஓது தலின், அதற்கு மாறாகத் தன்னைச் சார்ந்த சுந்தரரைப் பிழையற் படுப்பித்து ஒறுத்தவன் சைவசித்தாந்தக் கடவுளான சிவபிரான் ஆவனோ? மற்றுத் தூய்தாய் நின்ற நிலையிழந்து மாயையில் அகப்பட்டுப் பிரமமே சீவனாயிற்று எனப் புகலும் மாயாவாதப் பற்றுடைய அம் மறுப்புரைகாரரை யொத் தார்க்கே அக் கதை மெய்யாகக் காணப்படுமன்றிப், பிழை படுமாறு உயிரை ஏவுவது ஆணவமலம், அம் மலத்தின் சேர்க்கையினின்றும் உயிரை யெடுப்பித்துப் பின்னர் அது பிழைபடாவாறு தன் திருவருட்பெருக்கிற்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/191&oldid=1583880" இலிருந்து மீள்விக்கப்பட்டது