உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் 16

“சத்தியுஞ் சிவமும்ஆய தன்மை இவ்வுலகமெல்லாம் ஒத்தொவ்வா ஆணும்பெண்ணும் உயர்குண குணியுமாக வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் இத்தையும் அறியார்பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்”

வாழ்

என்னுஞ் சிவஞானசித்தியார்த் திருச் செய்யுளால் நன்கு விளங்கும். இங்ஙனம் இருவகைப் பிறவி அருமையுந் தேற்றுஞ் சைவ சித்தாந்த உண்மை தேறாது, அம் மறுப்புரைகாரர் பெண் பிறவியையும் அவ்வாற்றால் இறைவன்றன் படைப்பினுயர் பையும் இழித்துரைக்கப் புக்கது, அவர் தமது நாளெல்லாம் பழகிய மாயாவாதப் பொய்வழக்கினைச் சைவ நூற் போர்வையுண் மறைந்துநின்று நாட்டிவிடும் நோக்கங் கொண்டேயாம். இவர் எத்துணை தான் சைவவுண்மையினைத் திரித்து மறைக்க முயலினும், அது வைக்கோற் போரினால் மறைவுண்டு நில்லாத காழுந்தீப்போல், இவர்தஞ் சாற்பொருட் குவியலை நீறாக்கி மேற்கிளர்ந்து மிளிரு மென்க. அது நிற்க.

6

மாதரார் தம்முள் அடியாராதற்குத் தக்க தகுதியுடையாரில்லை யென்று இவர் துணிந்துரைத்த பீறலுரை, சைவ நூல் உணர்ச்சியில்லாப் போலிச் சைவர்பாற் செல்லுமே யன்றி, அவ் வுணர்ச்சி சிறிது வாய்ந்த சிறார்மாட்டுஞ் செல்லாது. இத்தமிழுலகமெல்லாஞ் சிவமணங் கமழ்வித்தற்குத் தோன்றிய திருஞானசம்பந்தச் செந்தமிழ்ப் பைந்தாமரை மலர்முகிழைப் பாண்டிநாட்டுக்கு வருவித்து அதன் பெருகுமணத்தாற் சமண் முடைநீக்கி, அம் மலரினின்றும் பொழிந்த தமிழ்த்தேனிற் படிந்து நின்றவர் யார்? மங்கையர்க்கரசியாராம் ‘பங்கயச் செல்வி' யார் அல்லரோ! ஒரு முழுமுதற்கடவுள் உண்மை தேற்றும் அருமைச் சைவசமயந்தன்னை யகன்று பாழ்ங்கோள் பகருஞ் சமண்பாழி புகுந்த தன் இளவலை மீண்டுஞ் சைவம் புகுமாறு இறைவனை வேண்டி இத் தமிழ்நாட்டை வாழ்வித்த அலகில் பெரும்புகழார் யார்? திலகவதியாராம் நலமிகு நங்கையாரல்லாரோ? நம்பரடியார் திருத்தொண்டை இம் பருலகில் நன்கு விளக்கித், தேவர்க்கரியோன் திருவருட் பேற்றை மாங்கனியதனொடுந் தேங்கப்பெற்று, நெற்றிக் கண்ணன் கொற்றப் புகழைப் பைந்தமிழ்ப்பாவிற் சிந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/195&oldid=1583900" இலிருந்து மீள்விக்கப்பட்டது